இர.மணிமேகலை கவிதைகள் மூன்று!

1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

Continue Reading →

ஆய்வு: ஔவையின் ‘மொழி’

ஆய்வுக்கட்டுரை!

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒன்றிணைந்திருந்த மொழி சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை அமைக்கிறது. மொழியே கருத்துப்  பரிமாற்றக் கருவி. மொழியானது சமுதாய வளர்ச்சிக்கு உதவும் அதே நிலையில் மற்றொரு பணியையும் செய்கிறது. அதாவது சமுதாயத்தின் பண்பாட்டுக் கட்டுமானத்தைத் தக்கவைப்பது எவ்வாறெனில் மொழியின் வழியாகவே வணங்கும் பண்பு வெளிப்படுகிறது. அதே நிலையில் எதிராளியை ஏவுதலும் நிகழ்ந்தேறுகிறது. மொழியே அதிகாரப் படிநிலைகளை அதாவது, அரசன், குடிமகன், அதிகாரி, அலுவலர், ஆண், பெண் என்பனவற்றை நிறுவும் ஊடகமுமாகிறது.

ஔவையாரின் அகநானூற்றுப் பாடல்கள் பெண்ணின் மொழியாக வெளிப்படுத்தியிருக்கும் பெண்ணின் நிலைப்பாட்டையும் பெண்மொழியாகப் பெண்ணின் குரலில் முன்வைத்திருக்கும் உணர்வு நிலைகளையும் ஆய்வுக்குட்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. எனவே மொழிகுறித்த சிந்தனையுடனேயே கட்டுரையைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

Continue Reading →