முகநூல்: தமிழினி கவிதைகளிரண்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

துளி – 02

கட்டளைகள் பறக்கின்றன.

காதோரம் பொருத்திய

சவுக்காரத்துண்டு

“ஹலோ ஹலோ

சொல்லுங்க ஒவர்”

வெலிக்கடைச் சுவர்களையும் கடந்து

விரிகிறது அவளது மனவெளி

Continue Reading →

எழுதுகோல் எடு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

Continue Reading →

ஒரு தீர்மானம்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஒரு தீர்மானத்துடன்

உட்கார்ந்திருந்தேன்.

இன்று

எங்கு செல்வதில்லை..

எதுவும் படிப்பதில்லை..

யுத்தம்,மரணம்,

கொலை,வன்முறை

எது

நடந்தாலும்

தெரியாமலேயே

இருக்கட்டும்..

Continue Reading →

குடிகார அப்பாக்கள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

Continue Reading →

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை 13.5.2015: பாதம் தொட்டு வணங்குவோம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!வாழ்வு பூத்துக் குலுங்கும்

பூஞ்சோலையாய் மணம்

வீச வேண்டுமா?

பூரிப்புடன் வாழ்வில்

நடை பயில வேண்டுமா?

அறிவு தந்து

உலகை காட்டிய ஆத்மாவை

அடி தொட்டு பாதம் வணங்குவோம்

ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.

Continue Reading →

‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அழைக்கின்றனர்.

காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு | இடம்: வவுனியா நகரசபை மண்டபம்

‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அழைக்கின்றனர். கூட்டுப்படை பலம் – கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள்.

‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழதேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத பெருத்த துயர நிகழ்வாகும். ‘தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக’ இந்நாளை பிரகடனப்படுத்தி, ‘இனப்படுகொலை’ நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தின் பங்களிப்புடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் 18.05.2015 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மிகவும் நெருக்கடியான கடந்த ஐந்துவருட காலத்தில், மிகவும் மோசமான ‘அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு’ மத்தியில் போரில் உயிர் குடிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்ததைப்போலவே, இம்முறையும் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை அனுஸ்டிக்கின்றோம்.

Continue Reading →