மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்

மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்

பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்

அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்

Continue Reading →

இரங்கல் கவிதை: எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

பாலா,

எங்களையெல்லாம் விட்டு

திடீரென பிரிந்துவிட்டீரே…..!

இதுவென்ன கொடுமை…..?

நாங்கள் என்ன குறை செய்தோம்……?

பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு

இரண்டு நாட்களுக்கு

முன்புதானே கொண்டாடினீர்………?

நேற்று இருந்தோர்

இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….!

Continue Reading →

ஆய்வு: சித்தேரிப் பகுதியின் ஏர்க்கருவியும் பயன்பாடும்

ஆய்வுக்கட்டுரை!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில்  பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நில அமைப்பு

சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர்.  அவை,    நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) ,  கொத்துக்காடு  களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)

உழவுக்காடு

இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.

கொத்துக்காடு

கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்

ஆய்வுக்கட்டுரை!மகாபாரதப்போர் நடந்த காலம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது இன்றுள்ள கோட்பாடாகும். இன்று நமக்கு கிடைத்துள்ள தொன்மையான சங்கத் தமிழ் இலக்கியம் எல்லாம் மகாபாரத காலத்துக்குப் பிற்பட்டனவாகும். ஆகவே மகாபாரதச் சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது நம் அறிந்த ஒன்றாரும். அவை, “உலகப்பெருங்காப்பியங்களுல் மகாபாரதமும் ஒன்றாகும். உலக இலக்கியங்களுல் அளவாற் பெரியது மகாபாரதமே என்பர் மோனியர் வில்லியஸ்.”1 இவை வட நாட்டில் நடந்த மகாபாரப் போரிடைத் தென்னாட்டு மூவேந்தர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியாகும். அங்ஙனம் வரலாற்றின் மகாபாரதக் கதை தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் புறநானுறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றுள் மகாபாரதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் புலவர் பெருமக்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளைக் பற்றி விளக்குவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.

Continue Reading →