நூல் அறிமுகம்” கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

நூல் அறிமுகம்" கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வைஉடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.

யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது.  இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05)  என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.

அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.

Continue Reading →

கவிதை: அத்தை ஆகிய சித்தப்பா

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னுள்
கனன்ற நெருப்பு –
பதின்ம வயதில்
எழுந்து நின்று
கொழுந்து விட்டெரிகையில்
தோன்றியது வினா –
நான் ‘நானாக’ வாழ்வதா
அன்றி
ஆணாகவே வாழ்வதா?

Continue Reading →

“உலகத் தொல்காப்பிய மன்றம்” கனடாக்கிளை உதயமானது.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

ஆரம்பக் கூட்டம் ஒக்டோபர் 29.10.2015 திகதி பிஞ் மற்றும் மிடில்பீல்ட் சந்திக்கருகாமையில் உள்ள GTA Square இல் உள்ள விருந்தினர் மண்டபத்தில் பி.ப. 7.0மணிக்கு மன்றத்தின் பேராளர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அவர் மன்றத்தின் நோக்கம் பற்றிய விளக்க உரையை நிகழ்த்தினார். தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், நோக்கங்கள், கருத்துக்கள்பற்றிய விளக்கமாக அமைந்திருந்தது அவரது உரை. பிராஞ்சில் இடம்பெற்ற முதலாவது உலகத்தொல்காப்பிய மன்றத்தின் மகாநாட்டிற்குத் தலைமை தாங்கியமைபற்றியும் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

திரு.சின்னையா சிவநேசன் அவர்கள் இந்த அமைப்பின் நோக்கம் சிறப்பாக அமையவேண்டும் தொடர்ந்து இயங்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

திரு. த.சிவபாலு அவர்கள் தலைமைச் சங்கத்தோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினையும் அதனை முன்னெடுத்துச் செல்ல செய்யவேண்டியவைபற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

ரொறன்ரோ அனைத்துலக மொழிகள் திட்டஅலுவலர் பொ.விவேகானந்தன் உரையாற்றும்போது தொல்காப்பியத்தின் சிறப்புப்பற்றியும் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு தொல்காப்பியம் பேசப்படாமைக்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்தார். அதனை முன்னெடுத்துச் செல்வதால் மட்டுமே தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் பேசப்படமுடியும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

Continue Reading →

கவிதை: சொல்லாத வார்த்தைகள்!

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இல்லாத இலக்கைப் போல்… நில்லாத நிழலைப் போல்…
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் காண்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் கேட்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எவ்வாறு அறிவார்? 

வில்லாலே விசயன் நில-நீர் நோக்கி மேலே-சுழல் மச்சம் 
நல்லாய்க் குறி வைத்து நங்கையைப் பிடித்தான் என்றால்…
பொல்லால் தன் பெண்ணாளை இருள்பிடித்த அடுக்களையுள்    
கல்வி-குறை முடக்குருடன் அடக்கத் துணிந்ததைப்போல்… நாம்…

அவல் போன்ற வார்த்தைகளை வெறும் வாயில் சப்புவதா?                                                      
சவர்க்காரக் குமிழிகளால் கவிக்கோட்டை கட்டுவதா?
இவர் என்ன, சுவர் இல்லாச் சித்திரங்கள் தேடுகிறார்?
மந்திரத்தால் மாம்பழங்கள் யாம் விழுத்த வேண்டுகிறார்?          
சந்தி சிரிக்க வைக்க எமைச் சங்கடத்தில் மாட்டுகிறார்?

Continue Reading →

கவிக்கோ பவளவிழா !

​கவிக்கோ அப்துல்ரகுமான்​கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க

நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.

கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான். அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,

Continue Reading →

கவிதை: அன்பெனும் விதை விதைப்போம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

புராதன சாமான்களுக்கென
ஒதுக்கப்பட்ட அறையொன்றில்
விடுதலை கிடைக்காத
போர்க்காலக் கைதியைப்போல
முடங்கிக் கிடக்கும்
முற்காலங்களில்
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள்
இருக்கின்றார்கள் என்பதற்கு
அடையாளமாக இருந்த அது
ஒருவேளை பாட்டிக்குத் தன் அம்மா
சீதனமாக கொடுத்ததாகக் கூட
இருக்கலாம்.

Continue Reading →

நோர்வே: கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இடம்:  நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாககாலம்: வியாழக்கிழமை  05.11.2015நேரம்: மாலை 18:00…

Continue Reading →