எதிர்வினை: நூல் அறிமுகம்: ‘தோழர் பால’னின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ பற்றி….

எழுத்தாளர் முருகபூபதிஅன்புள்ள  கிரிதரன்  அவர்கட்கு,   வாசிப்பும்  யோசிப்பும்  பத்தியில், தோழர் பாலன்  எழுதியிருக்கும்  இலங்கை  மீதான  இந்திய ஆக்கிரமிப்பு   நூல்  தொடர்பாக  உங்கள்  கருத்துக்களை   படித்தேன். இந்திய   ஆக்கிரமிப்பு  என்பது  அரசியல்  பொருளாதாரம்  மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல.   கலை,  இலக்கியம்,  திரைப்படம்  முதலான துறைகளிலும்   அந்த  ஆக்கிரமிப்பு  மற்றும்  ஒரு  அவதாரம் எடுத்திருக்கிறது.

ரோகணவிஜேவீராவின்   மக்கள்  விடுதலை  முன்னணியின் தொடக்ககால  (1970 – 1971)   வகுப்புகளில்  இந்திய  விஸ்தரிப்பு  வாதம் சொல்லப்பட்டது.   இந்திய  அமைதிப்படை    என்ற  பெயரில்  இந்திய இராணுவம்   உள்ளே  வந்தபோதும்,   அந்த  இயக்கம்  கடுமையாக எதிர்த்தது.   எனினும்  அதன்  செயல்பாடுகளில்  பல  குறைபாடுகள், தவறுகள்   இருந்தபோதிலும்  இந்திய  விஸ்தரிப்பு  வாதத்தை முன்வைத்த   முன்னோடியாக  அந்த  இயக்கம்  அமைந்திருந்தது.

புளட் இயக்கம்  வங்கம்  தந்த  பாடம்  என்ற  நூலை வெளியிட்டதன்  பின்னணியிலும்   அரசியல்  இருந்தது.   இந்திய  ஆக்கிரமிப்பு  இன்றும் தொடருகிறது.   அது  இலங்கையின்  கலை,  இலக்கிய, திரைப்படத்துறையையும்  பாதித்திருக்கிறது. யாரோ  முட்டாள்தனமாக  தாய்  நாடு  – சேய் நாடு  என்று  சொன்னதன் விளைவை   இலங்கை  இன்றும்  அனுபவிக்கிறது.

இந்திய   வணிக  இதழ்கள்  மீது  கட்டுப்பாடுகளை  விதிக்கவேண்டும் என்று   இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  குரல் எழுப்பியபோது   அதனை  எதிர்த்து  விமர்சித்தவர்களை   நீங்களும் அறிவீர்கள். இன்றும்   இந்திய  தமிழ்   நூல்களை   இலங்கைக்கு  தாராளமாக வர்த்தகரீதியில்   இறக்குமதி  செய்யமுடியும்.   அவ்வாறு இலங்கைத் தமிழ்நூல்களை   இந்தியாவுக்கு  ஏற்றுமதி  செய்யமுடியாது. இந்தச்சட்டம்   இன்றளவும்  நடைமுறையில்  இருக்கிறது. ஆனால்,  இந்த  விவகாரம்  இன்னமும்  இந்திய  தமிழ்  ஊடகங்களுக்கும்    இந்திய  தமிழ்  எழுத்தாளர்களுக்கும்  தெரியாது. சென்னையில்   எம்மவர்கள்  தமது  நூல்களை  புத்தகச்சந்தைக்கு எடுத்துச்செல்வதற்காக   இந்திய  பதிப்பகங்களின்   தயவில்தான் வாழ்கிறார்கள்.

Continue Reading →