நூல் அறிமுகம்: பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்  - வெலிகம ரிம்ஸா முஹம்மத் சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.

பூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது.

பல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.

Continue Reading →

கனடா நாட்டின் தலைமை அமைச்சருக்கு நன்றி

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் அழகைப் பாருங்கள்! உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். என் உள்ளங் கவர்ந்த நாடுகளுள் கனடாவுக்கு…

Continue Reading →

வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.

அறிவித்தல்[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]


வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:

21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.

Continue Reading →

திரை விமர்சனம்: பைரவா ! ஒரு பார்வை!

திரை விமர்சனம்: பைரவா ! ஓர் பார்வை!கடந்த வாரம் 2017 தைப்பொங்கலோடு உலகமெங்கும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது . இளைய தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படம் திரைக்கு வந்தது. உலகமெங்கும் திரைக்கு வந்த அந்தப் படம் டென்மார்க்கிலும் பல இடங்களில் திரையிடப்பட்டது.

என் மகன் விஜய் ரசிகன் என்பதால் அவன் பைரவா தியட்டரில் பார்க்க வேண்டும் என்று ஒரு மாசத்துக்கு முன்னமே என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் ஓம் ஓம் என்று சொல்லி காலத்தை கடத்தலாம் என்று நினைத்து வந்த எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வசமாக மாட்டிக்கொண்டு விட்டேன். எனது வீட்டில் இருந்து 40 km  தொலைவில் இருக்கின்ற அந்த தியட்டரில் “பைரபா” பார்பதற்காக நுழைந்தேன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மக்கள்  இருந்தார்கள். அதிகமாகப் பிள்ளைகளின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள்தாம் அதிகமாக இருந்தார்கள்.

இந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தைச்  சொல்லும் கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ஜேகபதிபாபு,டேனியல் ,பாலாஜி ,தம்பி ராமையா சதீஸ் மற்றும் பலரது நடிப்பில் இருந்தது அந்தப்படம் ஒளிப்பதிவு பாடல்கள் சிறப்பாக இருந்தன.  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்

சொந்தம் பந்தம் என யாருமே இல்லாத ஓர் அனாதையான விஜய் தன் நண்பனோடுசென்னையில் அறையொன்றில்  ஒன்றாக இருக்க அறிமுகமாகிற விஜய  வங்கியொன்றில் வராத கணக்குகளை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரியான ஒய் ஜி மகேந்திரன் ‘மைம்’ கோபிக்கு கொடுத்த  பல லட்சம் பணம் வட்டி ஒழுங்காக கட்டாததால் ஒய் ஜி மகேந்திரன் திருப்பி கேக்க போய் தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு காசும் கொடுக்காமல் அவமானப் படுத்தி திருப்பி அனுப்பிவிட ,அவர் வந்து விஜயின் உதவியை நாடுகிறார்.

Continue Reading →

ஆய்வு: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

Continue Reading →