ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் பங்குனி மாத இலக்கியக் கலந்துரையாடல்: ‘தமிழ் இதழியல்சார் முக்கிய முன்னெடுப்புகள்’ – கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!‘தமிழ் இதழியல்சார்  முக்கிய முன்னெடுப்புகள்’ – கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

சிறப்புபேச்சாளர்கள் உரை:
”கலை இலக்கியத் தளங்களில் உலகுதழுவிய இயங்குநிலை” -திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)
”சமூக – பண்பாட்டுச்  சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்” – திரு. பி.ஜெ.டிலிப்குமார்  (தாய்வீடு)

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் : மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா. கண்காட்சி – கருத்தரங்கு – பட்டிமன்றம் – மெல்லிசை, நடன அரங்கு – ஆவணப்படக்காட்சி.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா  2017

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.

இவ்விழாவை மெல்பனில் வதியும்  கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.  திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் ” பாரதியும் பெண்விடுதலையும் ” என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச  ” மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.

அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.

Continue Reading →