கவிதை: சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஒரு தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ

கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை

Continue Reading →