TASME2018 Conference – on July 7-8 at SickKids/University of Toronto

The 22nd Technological Advances in Science, Medicine and Engineering Conference (TASME2018) will be hosted in SickKids / University of Toronto on July 7-8, 2018. This is a unique International conference dedicated specifically to Science, Medicine and Engineering Advancements. We need your support and active participation to make the event successful. Anyone willing to volunteer in various conference related activities, please let us know. You are welcome to contribute professional papers, student papers and/or student posters. We would also like to invite you and your students to submit papers to the conference. For more info please visit our website; http://www.tasmeconferences.org/

Continue Reading →

(அக்கினிக்குஞ்சு.காம்) எழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது

(அக்கினிக்குஞ்சு.காம்) எழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது‘ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில்,  ஜெய்காந்தன், சிவசங்கரி,  ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி,  அசோகமித்ரன், பிரபஞ்சன்,வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன்  இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப்  புனைவுகளில் சமூக விமர்சனம்,தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி   இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது. இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர்.சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர்.

மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். மலேயா, சிங்கப்பூர், மெல்பன் ஆகிய பல அயலகப் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற   அழைக்கப்பட்டவர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.

Continue Reading →