இலண்டன்: தாமரைச்செல்வியின் ‘வன்னியாச்சி’ கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு!

இலண்டன்: தாமரைச்செல்வியின் 'வன்னியாச்சி' கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

Continue Reading →

கவிதை: அந்தி விடிவெள்ளி!

கவிதை: அந்தி விடிவெள்ளீ!

அதிகாலை விடிவெள்ளிப்பெண்ணே
ஒருபோதில்
அதிகாலைகளுக்கெல்லாம் எழிலூட்டினாய்.
அதிகாலைகளில் நான் விழித்தெழுந்ததெல்லாம்
அடியே! கிழக்கினில்
ஆடி அசைந்து வரும்
உன் அழகைப்பருகுவதற்காகத்தானென்பதை
நீ அறியாய்! அந்தத் தைரியத்தில் நானுனை
அணு அணுவாக இரசித்ததுண்டு; தெரியுமா?
அதிகாலை விடிவுப்பெண்ணே!
அதிகாலைகளினெழிலேற்றிய
விடியற் பெண்ணே!
இடையிலெங்கே சென்றாய்?
தனிமையிலெனைத் தவிக்க விட்டு நீ
தலைமறைவானாய்! ஏன்?

Continue Reading →