காக்கை இதழ்க் குழுமம் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு உலகத் தமிழ் குறுநாவல் போட்டி 2018 முடிவுகள்

கி.பி.அரவிந்தன்அறிவித்தல்‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ –  (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது. இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட  குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.

குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக  14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென  இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.

பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள்  – 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..

0.        முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்   கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)
0.        இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்    மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)
0.        மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்     குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)

திருத்தப்பட்ட  பட்டியல் :  09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’  எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’  எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.

நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

·         நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
·         இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
·         வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி  (ஜேர்மனி)
·         நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)

Continue Reading →

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே  !

சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !

Continue Reading →

ஆய்வு: நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் – ஜமாப் ஒப்பீடு!

இரா.மூர்த்திமனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன்,  ஆண்மான், ஒளி, சாத்திரம்,  மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை,  உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை,  சிற்பம்,  ஓவியம்,  கட்டிடம், நாட்டியம்,  கூத்து,  ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து,  ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.  இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.

“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து,  மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ,  நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும்,  ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும்  நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு,  திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு,  இசைக்கும்முறை,  அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும்,  சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில்  முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.

Continue Reading →