ஆய்வு: சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

கண்ணகிமுன்னுரை: –
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி.  நமது வாழ்க்கையே இலக்கியம்.  அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர்.  தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு.  இரண்டாம் நுற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.              

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் : –

” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று டாக்டர் சாமிநாதய்யர் கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தில் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.  தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நுல் சிலப்பதிகாரமாகும்.  இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம்.                 சிலப் பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.                  

1.   பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
2.   அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
3.   ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
4.   கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
5.   மானுடவியல் நோக்கில் ஐவகைநில தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.

பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர் : –
கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல் 

”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )

அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர்.  கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே.  என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.

Continue Reading →

சொல்லத்தவறிய கதைகள்: புனிதம் பறிக்கப்பட்ட புனித பூமியின் கங்கை மகள் – பிரேமாவதி !

பிரேமாவதி மனம்பெரி” உலகத் தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள் ”  என்ற  கோஷத்துடன் தொழிலாள   விவசாய  பாட்டாளி  மக்கள்  தமது  உரிமைகளுக்காக உரத்துக்குரல்   கொடுத்து  ஊர்வலம்  செல்லும்  நாள் மேதினம். வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இந்தவருடம் புத்தர்பெருமானுக்காக இந்த மேதினம் ஏழாம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தரின் பெயரால் எதிர்காலத்தில் இவ்வாறு எத்தனை மாற்றங்கள் வருமோ தெரியவில்லை.!? தங்கள் பொது எதிரணிக்கு மேதினம் கொண்டாடுவதற்கு காலிமுகம் கிடைக்கிவில்லை என்பதனால், தாங்கள் காலியில் கொண்டாடவிருப்பதாக சொல்லியிருக்கிறார் மகிந்தர். வழக்கமாக நடக்கும் மேதினங்களில் பல அணிகள் பிரிந்து பல மேடைகளில் “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பார்கள். வழக்கமாக கொழும்பில் மாத்திரம் சுமார் 17  மேடைகளில்   பிரிந்து  நின்று உலகத் தொழிலாளர்களே   ஒன்றுபடுங்கள்  என்பார்கள்   அல்லது  அடுத்த தேர்தல்  பற்றி  பேசுவார்கள்!!?? இலங்கையில்   தொடர்ச்சியாகவே  மேதின  மேடைகளில்  இந்த உழைக்கும்  வர்க்கம்  பற்றியா  பேசப்படுகிறது…?  அந்த  வர்க்கத்தின் நலன்கள்   குறித்தா  தீர்மானங்கள்  எடுக்கப்படுகின்றன….? அனைத்து   மே  தின  மேடைகளிலும்  அடுத்த  தேர்தலைக்குறியாக வைத்துத்தான்   பேசப்படுகிறது.   இலங்கையில்  ஒவ்வொரு  வருடமும்   ஏப்ரில்  மாதமும்  மே  மாதமும்   வரலாற்று முக்கியத்துவம்   வாய்ந்த  மாதங்கள்.  1971   ஏப்ரிலில்  மிகவும் கொடூரமான   முறையில்  அடக்கி  ஒடுக்கப்பட்டது  மக்கள்  விடுதலை   முன்னணியின்  போராட்டம்.   நதிகளில்  மிதந்த சடலங்கள்,   பொலிஸ்  நிலையங்களின்  பின்வளவுகளில்  எரிக்கப்பட்ட   சடலங்கள்,   ரயர்களுடன்  கொளுத்தப்பட்ட  இளம் உயிர்கள்.    கூட்டிக்கழித்துப்பார்த்தால்  25   ஆயிரத்தையும்   தாண்டும் அவற்றின்   எண்ணிக்கை.

2009   ஆம்  ஆண்டு  மே   மாதத்தில்  மற்றுமொரு   இனச்சங்காரம் முள்ளிவாய்க்காலில்    முடிவுற்றது.   இதில்  கொல்லப்பட்ட  மனித உயிர்கள்   பற்றிய  சரியான  மதிப்பீடுகள்  இன்றி,  இன்னமும் போர்க்குற்றம்   பற்றி   பேசப்படுகிறது.  காணாமல்  போனவர்களின் உறவினர்களின்   கண்களிலிருந்து  கண்ணீர்  இன்னமும் வற்றவில்லை. தென்னிலங்கையிலும்   வடக்கிலும்  ஆயுதம்  ஏந்திய  இரண்டு  பெரிய தலைவர்கள்   இன்று  இல்லை.   இருவருமே   கொல்லப்பட்டதுடன் அவர்கள்   இரண்டுபேரும்  தலைமை தாங்கிய  பேரியக்கங்களின் ஆயுதப்போராட்டம்   முடிவுக்கு  வந்தாலும்,   மக்கள்  விடுதலை முன்னணி   ஜனநாயக  நீரோட்டத்தில்  சங்கமித்து –  ஆயுதங்களை நீட்டாமல்,  கைகளை  நீட்டி  வாக்குகளை  கேட்டு  பாராளுமன்றம் சென்றது. ஆனால் –  புலிகளின்  மீதான   தடை  தொடர்வதனால் மே  மாதம்  முள்ளிவாய்க்காலுடன்  முற்றுப்பெற்ற  அந்த  இயக்கத்தின் முகவர்களாக   இருந்த  அகிம்சாவாதிகள்  பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

ரோஹண   விஜேவீராவின்  மனைவி  சித்ராங்கனியும்   ஐந்து பிள்ளைகளும்  அரச பாதுகாப்பில்  ஒரு  கடற்படை முகாமில்  வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டார்கள். முத்த  பெண்பிள்ளை   ஈஷா, புத்தி   பேதலித்து  தனது  தாயையும்  தம்பியையும்  தாக்கியதனால் பெற்றதாயினால்  பொலிஸில்  முறையிடப்பட்டு  காவலில் வைக்கப்பட்டாள். விஜேவீராவின் மூத்த மகன் தற்போது மாஸ்கோவில் தந்தை படித்த அதே லுமும்பா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். வேலுப்பிள்ளை  பிரபாகரனின்  மனைவி  மதிவதனி  மற்றும் பெண்பிள்ளை   என்ன  ஆனார்கள்…? என்பது  தொடரும்  மர்மம். அவரது ஆண்வாரிசுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது தெரிந்த செய்தியே! இந்த  பத்திக்கு  நான்  வைக்கவிரும்பிய  தலைப்பு  இயல்புகள்  பற்றியதே.

சூழல்,   சுற்றம்,   சர்வதேச  மாற்றங்கள்  எதனையுமே  கவனத்தில் -கருத்தில்  கொள்ளாமல்  தமது  இயல்புகளில்  பிடிவாதமாக  இருந்த இரண்டு  பெரிய  ஆளுமைகளின்  இயல்புகள்  –  முடிவில் அவர்களையும்   அழித்து,   அவர்களை  நம்பியிருந்தவர்களையும் நட்டாற்றில்   கைவிட்ட  கதையை   மீண்டும்  மீண்டும்  ஒவ்வொரு வருடமும்   ஏப்ரில்,  மே  மாதங்களில்   நாம் படித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தப்பின்னணிகளுடன், இற்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் (1971) புனிதம்போற்றும் பூமி கதிர்காமத்தில் நடந்த கதைக்கு வருகின்றேன்.

Continue Reading →

க. இரமணிதரனின் ‘மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில!

இரபீந்திரநாத் தாகூர்க.இரமணிதரன்– புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ‘ சித்தார்த்த சேகுவேரா’, ‘பெயரிலி’, ‘திண்ணைதூங்கி’யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது ‘அலைஞனின் அலைகள்: கூழ்’ என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. – பதிவுகள் –



Monday, April 11, 2005

தன்கா – I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை,
25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை – கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)

1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்

2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்

Continue Reading →