ஆய்வு: பதிற்றுப்பத்தில் உவகை

- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

மெய்பாடு
மானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.

மெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)

என்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்

நகை – எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகை – இழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,
மருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் – அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,
பெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை
உவகை – செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு

அகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் அகமரபு மாற்றம்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியங்களோடு செவ்விலக்கியமாகப் போற்றுமளவுக்கு சிறப்புடயது முத்தொள்ளாயிரம். வெண்பா யாப்பில் மூவேந்தர்களின் புகழினைப் பாடுவதற்கென்று எழுந்த நூலாகும். இந்நூல் சேர சோழ பாண்டியர்களின் புகழினைப்பாடும் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகவும் இந்நூலில் மூவேந்தர்களை பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர் சுட்டிப் பாடாமல் வேந்தர்களும் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பிலிருந்து 108 வெண்பாக்கள் மூவேந்தர்களை ஒவ்வொருவரையும் கூறப்படுவதால் இந்நூல் முத்தோள்ளாயிரம் என்ற பெயர் பெற்றது எனலாம். முத்தொள்ளாயிரத்தின் கால வரையறை மற்றும் பாடல் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. புறத்திரட்டைப் பதிப்பித்தப் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்று முன் வைக்கிறார். இதனை பல்வேறு அறிஞர்கள் பலரும் பல்வேறு தரப்பில் உரைக்கின்றனர். இதை

கா.கோ. வேங்கடராமன்    – கி.பி. 5ஆம் நூற்றாண்டு
வையாபுரிப்பிள்ளை    – கி.பி. 9ஆம் நூற்றாண்டு
வி. செல்வநாயகம்    – கி.பி. 6ஆம் நூற்றாண்டு
நாராயண வேலுப்பிள்ளை    – கி.பி. 5ஆம் நூற்றாண்டு
என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முத்தொள்ளாயிரக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.

முத்தொள்ளாயிரம் சங்ககாலத்தின் பிற்பகுதியில் ஒட்டி எழுந்த நூலாகக் கருதப்படுகிறது. பல தனிப்பாடல்களின் தொகுதியாக அமைகின்றது. சங்க அக மரபு செல்வாக்கை இந்நூல் பெற்று திகழ்கிறது. இன்று முத்தொள்ளாயிர பாடல்கள் 108 பாடல்களே கிடைக்கின்றன. இதனுடன் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என் யூகத்தில் சிலர் சேர்க்கப்பட்டு 130 பாடல்களை முத்தொள்ளாயிரப் பாடல்களாக சேது ரகுநாதன் பின்பு எழுதி கதிர்முருகு போன்றோரால் அடையாளங் காணப்பட்டுள்ளது. முத்தொள்ளாயிர பதிப்புகளை இனங்கண்டு இறுதியாக 109 பாடல்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதனை சேதுரகுநாதன் மட்டும் சைவசித்தாந்த பதிப்பின் வழியாக 130 பாடல்கள் உடையது என்ற கருத்தை முன்மொழிகிறார். மேலும் பிறர் ஆசிரியர்களின் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபட்டு 130 நூற்பாக்களை (பாடல்கள்) உடையது இதனை நோக்கும்போது முத்தொள்ளாயிரத்தின் வளர்ச்சி என்றே எண்ணத்தக்கது கிடைக்கப்பெற்ற 108 பாடல்களில் அகத்திணையின் ஓரே திணை கைக்கிளையில் மட்டும் 65 பாடல்கள் அமைந்ததோடல்லாமல் சங்க அக இலக்கிய மரபின்று பெரும் மாற்றுத்தினைப் பெற்றிருக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?கனவு மனித மனத்தின் உள்வெளிப்பாடு, மனித வாழ்வில் இது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதன் கனவுகாண்பதையே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அடக்குகின்றான். இன்றைய நிலையில் கனவினை உளவியல் கோட்பாட்டிற்குள் அடக்குவதை காணமுடிகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை கனவு வருங்காலத்தின் வெளிப்பாடாக இலக்கியத்திலும் காப்பியத்திலும் முன்வைப்பதை அறியலாம். மனிதனே இதற்கு முதன்மையானவனாக உள்ளான். அத்தகைய மனிதன் எக்காலத்திலும் கனவு காணும் இயல்புடையவனாக இருந்துள்ளான். அவர்களுள் அருவமாக கனவினைக் காவியப் புலவர்கள் தம் படைப்புகளில் அழகுறக் கையாண்டுள்ளனர். கனவுகளைப் பற்றியும், அவை கம்பகாவியத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் பற்றியும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கனவுகளைப் பற்றிய அறிஞர்களின் கோட்பாடுகள்:
• கனவுகள் கடவுளாலோ, கடவுட்தன்மை உடையவர்களாலோ ஏற்படுவன அல்ல; மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை, மேலைநாட்டு உளவியல் அறிஞர்களான சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud), கார்ல் யங் (Carl Jung), ஆல்ஃபிரெட் அட்லர் (Alfred W. Adler) முதலியோர் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு விதமான முடிவுகளைக் கூறி இருக்கின்றனர். அதில்,

• கனவுகள் வருங்கால வாழ்வின் உருவெளித் தோற்றமே என்றும், ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப் போக்கை உய்த்து உணர்ந்து கொள்வதற்கும், அல்லவை கடிந்து தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும் அவை பயன்படுகின்றன என்றும் அட்லர் கருதினார். ஆனால்,

• யங் என்பார் நிகழ்காலத்தில் விளையும் சிக்கல்களால் உருவாக்கப் படுவனவே கனவுகள் என்று கூறுகிறார்.

• அறிஞர் ஃப்ராய்டு இவ்விருவரின் கொள்கைகளையும் மறுத்து, அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் குறிப்பாகக் காம இச்சைகளே கனவுகள் தோன்றுவதற்குக் காரணம் என்று வலியுறுத்தினார். (The Interpretation of Dreams) இக்கருத்துமிகைப்பட்டது என்பதையும் தனது கொள்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பகுதியால் உணரத்தலைப்பட்டார், என்பதையும் 1920க்குப் பிறகு வந்த அவருடைய எழுத்துகள்காட்டும்.

• வடமொழி வாணராகிய கௌடபாதர் என்பார் கனவுகளை இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசி, அவை மனிதனுக்கு கடவுளால் காட்டப்படும் முன்னறிவிப்பு என்று மொழிகிறார். மேலைநாட்டு அறிவியல் உளவியல் நெறிநின்று ஆராய்ந்து நூல் எழுதிய டாக்டர் ராமநாராயணன் என்பவரும் கௌடபாதரின் கருத்தையே ஒப்புகிறார். “கனவுகள் என்பன தெரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றது” என்பது சுவாமி சிவானந்தரின் கருத்து; நடைமுறை வாழ்வில் காணப்படும் காரண காரிய நெறியே கனிவலும் அமைந்திருக்கிறது என்று இவர்களின் கூற்றை எடுத்து கூறுகிறார். (மா. இராமலிங்கம் இலக்கியத் தகவு பக்.11)

Continue Reading →

ஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.

பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: மாற்றரும் கூற்றம் (தொன்மவியல் ஆய்வு)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பிறப்பு இறப்பு என்பது எவ்வுயிர்க்கும் பொது என்றாலும், மனிதர்களைப் பிறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் இறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் உண்டென்றும் மக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்நாளும் கணிக்கப்படுகின்றன என்றும் நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கணிக்கப்பட்ட மொத்த நாட்களும் முடிந்தபிறகு உயிரை வெளவுவதற்குக் கூற்றுவன் வருவான் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது. இந்தத் தொன்ம நம்பிக்கையை எட்டுத்தொகை முதலான சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்நூல்கள் கூற்றுவனைப் பல பெயர்களில் குறித்துள்ளன. காலத்தைக் கணிப்பதால் அவன் ‘கணிச்சி’ எனப்பட்டான். இவன் நடுவுநிலைமையோடு செயல்படுவதால் ‘நடுவன்’ (இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூற்பா எண்: 406) என்று பிற்காலத்தினரால் குறிக்கப்பட்டுள்ளான்.

இந்தக் கூற்றுவன் தொன்மம் எப்போது உருவாகியிருக்கலாம், கூற்றுவனின் ஆயுதங்கள் யாவை, எட்டுத்தொகை நூல்களில் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள செய்திகள் யாவை என்பன ஆயப்படவுள்ளன. குறிப்பாகக் ‘கணிச்சி’ என்ற மழுப்படையை அல்லது குந்தாலி என்னும் தோண்டும் கருவியைக் கூற்றுவன் பயன்படுத்துவதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இது பிற்காலத்தில் பிறிதொரு கருவியாக மாறியது எப்படி என்பது ஆராயப்படவுள்ளது. இப்படி உயிர்களுக்குத் தீர்ப்பளிக்கும்நிலையில் ஓர் அறக்கடவுள் எனச் சித்திரிக்கப்பட்ட கூற்றுவன் எவ்வாறு சிவன், திருமால், முருகன் ஆகியோர்க்கு அடங்கியவனாக மாற்றப்பட்டான் என்பதையும் சிவன் எவ்வாறு காலகாலனாக (எமனுக்கே எமனாக) மாறினான் என்பதையும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

முன்னோடித் தொன்ம ஆய்வுகள்
முனைவர் கதிர்.மகாதேவன் “தொன்மம்” (1984) என்ற நூலில், ‘இலக்கியத்தில் தொன்ம உத்திகள்’ என்ற பகுதியில் சங்க இலக்கியங்களில் தொன்மம் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் குறிப்பிட்டுள்ளார். “சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்” (2000) என்ற நூல் வே.அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், “வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்” (2001) என்ற நூலை முனைவர் பெ.மாதையன் வெளியிட்டுள்ளார். அதில், ‘சங்க இலக்கியத்தில் தொன்மங்கள்’ என்ற நான்காம் பகுதியில் சங்க இலக்கியத் தொன்மங்களை விரிவாக ஆய்ந்துள்ளார். இதில் கூற்றுவனைப் பற்றியும் இரண்டரைப் பக்க அளவில் (156-158) ஆய்ந்துள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்தும் முந்தைய ஆய்வுகளிலிருந்தும் தரவுகளை எடுத்துக்கொண்டு மேலும் இந்தக் கட்டுரை பயணிக்கிறது.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்

- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -முன்னுரை
அறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேர்பு நிரைபு எண்ணிக்கை
நேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.

“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப”
[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]

என வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்

“குறிலிணை யுகர மல்வழி யான”
[தொல்காப்பியம்- செய்யுளியல்-நூற்பா 317]

என்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் தனிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.

குற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வகைப் பூவை கண்ணியாகச் சூட்டிக்கொள்வர். அவற்றில் வெட்சி, கரந்தை, நொச்சி, உழிஞை முதலிய மலர்கள் குறிப்பிடத்தகுந்தவை. மன்னன் போருக்கான பூவை வீரர்களுக்கு வழங்கும் ‘பூக்கோள்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவதைப் புறப்பாடல்களில் பல இடங்களில் காணலாம். அவ்வாறு இந்நிகழ்வு நடைபெற்ற சூழலில் அவர்களின் மனைவியர் பூச்சூடுதலை கைவிட்டனர் என்றும், அதன் காரணமாகப் பூ விற்கும் பெண்டிர் அம்மகளிர் வசிக்கும் மனைக்குச் செல்லாது வேற்று மனை நோக்கிச் சென்றனர் என்றும் குறிக்கப்படுகிறது. எனவே போர்க்காலங்களில் வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்வில் மலர்களால் அமையபெற்ற பண்பாட்டு நுட்பத்தினை இதன்மூலம் உய்த்துணர முடிகிறது.

Continue Reading →