தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்

தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்தமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.

மரபியல்
“சான்றோர்களும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபாகும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஒன்றிற்கு சொற்பொருள் உணர்த்தியதால் மரபியல் என்னும் பெயர் பெற்றது. ஒரு மரத்தின் வித்து கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மரமாகி தன்னுடைய சந்ததியை வளர்ப்பது போல என்றும் மாறாமல் இருப்பது மரபு” என்று தமிழண்ணல் மரபியலுக்கு விளக்கம் தருகிறார்.

“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளின் கண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனுமின்றி இருதிணை பொருட் குணனாகிய இளமையும், ஆண்மையும், பெண்மையும் பற்றிய வரலாற்று முறையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவை மரபெனப்படுமென்பது” என்று பேராசிரியர் மரபியலுக்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

இதேபோல் மரபியலுக்கு இளம்பூரணர் உரை வகுக்கையில் “இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட பொருட்டு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். ஒரு பொருளுக்கு மரபாவது எதுவெனில் அப்பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருள் பெற்று மரபுக் குறித்துத் தொன்றுத்தொட்டு வழங்கிவருவது மரபுப்பெயர்கள் ஆகும்.

Continue Reading →