ஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.

பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.

Continue Reading →

ஆய்வு: மாற்றரும் கூற்றம் (தொன்மவியல் ஆய்வு)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பிறப்பு இறப்பு என்பது எவ்வுயிர்க்கும் பொது என்றாலும், மனிதர்களைப் பிறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் இறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் உண்டென்றும் மக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்நாளும் கணிக்கப்படுகின்றன என்றும் நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கணிக்கப்பட்ட மொத்த நாட்களும் முடிந்தபிறகு உயிரை வெளவுவதற்குக் கூற்றுவன் வருவான் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது. இந்தத் தொன்ம நம்பிக்கையை எட்டுத்தொகை முதலான சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்நூல்கள் கூற்றுவனைப் பல பெயர்களில் குறித்துள்ளன. காலத்தைக் கணிப்பதால் அவன் ‘கணிச்சி’ எனப்பட்டான். இவன் நடுவுநிலைமையோடு செயல்படுவதால் ‘நடுவன்’ (இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூற்பா எண்: 406) என்று பிற்காலத்தினரால் குறிக்கப்பட்டுள்ளான்.

இந்தக் கூற்றுவன் தொன்மம் எப்போது உருவாகியிருக்கலாம், கூற்றுவனின் ஆயுதங்கள் யாவை, எட்டுத்தொகை நூல்களில் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள செய்திகள் யாவை என்பன ஆயப்படவுள்ளன. குறிப்பாகக் ‘கணிச்சி’ என்ற மழுப்படையை அல்லது குந்தாலி என்னும் தோண்டும் கருவியைக் கூற்றுவன் பயன்படுத்துவதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இது பிற்காலத்தில் பிறிதொரு கருவியாக மாறியது எப்படி என்பது ஆராயப்படவுள்ளது. இப்படி உயிர்களுக்குத் தீர்ப்பளிக்கும்நிலையில் ஓர் அறக்கடவுள் எனச் சித்திரிக்கப்பட்ட கூற்றுவன் எவ்வாறு சிவன், திருமால், முருகன் ஆகியோர்க்கு அடங்கியவனாக மாற்றப்பட்டான் என்பதையும் சிவன் எவ்வாறு காலகாலனாக (எமனுக்கே எமனாக) மாறினான் என்பதையும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

முன்னோடித் தொன்ம ஆய்வுகள்
முனைவர் கதிர்.மகாதேவன் “தொன்மம்” (1984) என்ற நூலில், ‘இலக்கியத்தில் தொன்ம உத்திகள்’ என்ற பகுதியில் சங்க இலக்கியங்களில் தொன்மம் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் குறிப்பிட்டுள்ளார். “சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்” (2000) என்ற நூல் வே.அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், “வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்” (2001) என்ற நூலை முனைவர் பெ.மாதையன் வெளியிட்டுள்ளார். அதில், ‘சங்க இலக்கியத்தில் தொன்மங்கள்’ என்ற நான்காம் பகுதியில் சங்க இலக்கியத் தொன்மங்களை விரிவாக ஆய்ந்துள்ளார். இதில் கூற்றுவனைப் பற்றியும் இரண்டரைப் பக்க அளவில் (156-158) ஆய்ந்துள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்தும் முந்தைய ஆய்வுகளிலிருந்தும் தரவுகளை எடுத்துக்கொண்டு மேலும் இந்தக் கட்டுரை பயணிக்கிறது.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்

- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -முன்னுரை
அறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேர்பு நிரைபு எண்ணிக்கை
நேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.

“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப”
[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]

என வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்

“குறிலிணை யுகர மல்வழி யான”
[தொல்காப்பியம்- செய்யுளியல்-நூற்பா 317]

என்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் தனிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.

குற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வகைப் பூவை கண்ணியாகச் சூட்டிக்கொள்வர். அவற்றில் வெட்சி, கரந்தை, நொச்சி, உழிஞை முதலிய மலர்கள் குறிப்பிடத்தகுந்தவை. மன்னன் போருக்கான பூவை வீரர்களுக்கு வழங்கும் ‘பூக்கோள்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவதைப் புறப்பாடல்களில் பல இடங்களில் காணலாம். அவ்வாறு இந்நிகழ்வு நடைபெற்ற சூழலில் அவர்களின் மனைவியர் பூச்சூடுதலை கைவிட்டனர் என்றும், அதன் காரணமாகப் பூ விற்கும் பெண்டிர் அம்மகளிர் வசிக்கும் மனைக்குச் செல்லாது வேற்று மனை நோக்கிச் சென்றனர் என்றும் குறிக்கப்படுகிறது. எனவே போர்க்காலங்களில் வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்வில் மலர்களால் அமையபெற்ற பண்பாட்டு நுட்பத்தினை இதன்மூலம் உய்த்துணர முடிகிறது.

Continue Reading →

ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓர் அறிமுகம்

ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓரு அறிமுகம்முன்னுரை
இயற்கையின் மக்களான மானிடர்களின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்புவரை ஏதோ ஒருவிதத்தில் ஒன்றிக்காணப்படுகிறது. இன்பமும் துன்பமும் இணைந்தது மனிதவாழ்வு என்றாலும், மக்கள் வாழ்கிற சூழலுக்கும் கிடைக்கப் பெறுகிற வசதிகளுக்கும் ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாற்றமுள்ளதாகக் காணப்படுகிறது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட அவரவர் வாழும் நிலைக்கேற்ப வேறுபட்டு விளங்குகின்றன. மனிதனின் அறிவு நிலைக்கேற்ப அவன் பேசும் சைகையிலிருந்து திருந்திய நிலை வரை மாற்றமுள்ளதாகக் காணப்படுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் மாற்றமுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் பழங்குடி மக்களான முதுவர் வாழ்வியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

முதுவர் அறிமுகம்
கேரள மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவர் பழங்குடி மக்களே ஆதிமுதற்கொண்டு வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர். இப்பழங்குடியினர் கேரளத்தில் இடுக்கிமாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலை, மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். “கேரளாவில் வசிக்கக்கூடிய முதுவர்கள் – மலையாள முதுவன் என்றும், தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய முதுவன் பாண்டிய முதுவன் என்றும் அழைக்கப்படுகின்றனர்” என்று ஜோஸ்வா தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியின மக்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

முதுவர் இனம்
முதுவர் இனம் என்பது நெருங்கிய உறவினரிடையே மணம் செய்து கொள்ள மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும் ஓர் இயல்பாகும் என்ற மானிடவியலறிஞரின் கருத்திற்கேற்ப முதுவர் பழங்குடியினர் பிற பழங்குடியினரிடமிருந்து வேறுபட்ட பண்புநலன்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேனீக்கள் மனித இனங்கள் என்னும் நூலில், ஆனைமலையில் வாழும் மலைமக்களும் திருவிதாங்கூர் – கொச்சிக்காடுகளில் வாழ்ந்துவரும் நாகரிகமடையாத மக்களும் திராவிட இனத்தைச் சார்ந்தவராவர் என்று எல்.ஏ.கிருஷ்ணஐயர் குறிப்பிடுகின்றார். இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதுவர் கலப்பினத்தவர் என்று மாக்கே குறிப்பிடுகின்றார். தர்ஸ்டனும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இப்பழங்குடியினர் உயர் சாதியினராகக் கருதப்படும் பிரமாணர், நாயர், தேவர், அகமுடையார், வெள்ளாளர் போன்ற இன மக்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். தங்கள் இனப் பெண்கள் மேற்குறிப்பிட்ட இனத்தாருடன் மண உறவு கொண்டாலும் திரும்பவும் தங்கள் இனத்தாருடன் சிறிது காலம் கழித்து சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர், மலைப்புலையன், காடர், வேடர் மன்னான் போன்ற இனமக்களைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதோ, அவர்களிடமிருந்து பொருட்களை உண்பதோ இல்லை என்கின்றனர்.

Continue Reading →

தமிழக இலக்கியச் செய்திகள் – மே 2018 – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

- சுப்ரபாரதிமணியன் -” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும்,  சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும்  வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும்  ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும்   இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .

திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு –  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,  திருப்பூர்  மாவட்டம் 6/5/18. ஞாயிறு  அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது. 2 நூல்கள் வெளியீடப்பட்டன. நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.

1. சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு
2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு

கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றபின்  பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்:

லட்சுமி அம்மா –தஞ்சாவூர், இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்-  ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர்  , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை.

அயலகம்: முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்( கனடா) , எம் எஸ்.லட்சுமி,  சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா.

ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் )  ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .

நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை  தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.

நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட   நூல்கள் பற்றி  முத்துபாரதி  பேசினார்.

ஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள்  ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )

Continue Reading →

கலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

கலைஞனுக்கு  அழிவில்லை: சினிமா  நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்பேராசிரியர் மெளனகுரு2012  ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா  ஹந்தகமயின்  இனி அவன்  எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக  கொழும்பு  புல்லர்ஸ்  வீதியில்  இருந்த  இலங்கைத்  திரைபடக் கூட்டுத்தாபன  சினிமா திரைஅரங்கில்    திரையிடப்படுகிறது. நண்பர்  அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில்  சந்தித்தபோது  அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே  சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு  உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்திராஜா,  தர்மசிரி  பண்டாரநாயக்க,  சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும்  ,சுவர்ணமல்லவாராய்ச்சியும்   அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும்  நாடகத்தால்  எனக்கு நண்பரானவர்கள்)  மற்றும் நான் அறியாத  சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம்  அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை.  படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென  அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு  கர ஒலி  எழுப்பினர்.  யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர்  ஜேம்ஸ் பீரிஸை  அவர் மனைவி  சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள்  பிரவேசித்தார்,

இப்பெரும் நெறியாளர்களும் நடிகர்களும் தம் இரு கைகூப்பி அவரைப் பக்தியோடு குனிந்து  வணங்கினர். அது ஓர் உணர்ச்சிகரமான கணம். தங்களுக்கு காத்திரமான சினிமா எடுக்க வழிகாட்டிய தமது பாட்டனாரைப் பேரக் குழந்தைகள் அன்பு பொங்க மிக மரியாதையுடன்  வரவேற்ற கணங்கள் அவை. அவரும் ஒரு குழந்தைபோல கை அசைத்து  சக்கர நாற்காலி வண்டியிலிருந்து  சற்று எழும்பி அனைவரதும் வரவேற்பை அன்போடு ஏற்றுக்கொண்டார். ஒரு முது  கலைஞரை இளம்  கலைஞர்  தலைமுறை  மதித்துப்போற்றும்  அப்பண்பு என்னை வெகுவாக ஆகர்சித்தது. நாமும்  அவர்களுடன் கலந்து எழுந்து நின்று   பெரு மகிழ்ழ்சியோடும் மரியாதையோடும்  கைதட்டி  லெஸ்டரை  வரவேற்றோம். குனிந்து  வணங்கினோம். அவ்வணக்கமும் கைகுவிப்பும் நம் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து  வந்தவை. அந்த அளவு சினிமா ரசிகர்களின் மனதில் ஓர் பெரும் இடம் பிடித்து வீற்றிருந்தார்  லெஸ்டர் ஜேம்ஸ்  பீரிஸ்.

1960  களில்  பேராதனைப்பல்கலைக்க்ழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில்  சிங்கள  சினிமாக்களுக்கு அறிமுகமானேன். அப்போது சிங்களம் புரியாவிடினும்  சில நல்ல  சிங்கள சினிமாக்களுக்கு எமது  சிங்கள  நண்பர்கள் எம்மை அறிமுகம் செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் லெஸ்டரின்  இரண்டாவது படமான  சந்தேசிய (தூது)  இப்படத்தை நான் 1961 இல் பார்த்தேன். தமிழ் சினிமா பார்த்து அதன் மனோரதிய உலகில் இருந்த என்னை சந்தேசிய  படம்  நிஜ உலகுக்கு இழுத்து  வந்தது. உள்ளூரிலிருந்த போர்த்துக்கேசிய  கோட்டை ஒன்றை உள்ளூர்க் கிராமப் புரட்சிகர இளைஞர்கள் ஒன்று  சேர்ந்து  தாக்கி அழிக்கும்  கதை. அந்த இளைஞர்களுள் ஒருவராக வந்து அப்போரில் இறப்பவராக மறைந்த நடிகர்  காமினி பொன்சேகா நடித்திருந்தார். அதற்காக அக்கிராமம்  தலைநகரில் இருந்து வந்த  போர்த்துக்கேய இராணுவத்தால்  ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்படுகின்றது. அந்த அழித்தொழிப்பும் மக்கள் அவலமும் மனதில் ஆழமாகப்பதிந்தன. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குணரத்தினம். அதன் இசையமைப்பாளர்கள்: முத்துசாமி , மொஹிதீன்பெக், லதாவல்பொல, தர்மதாச  வல்பொல   ஆகியோராவர். அதில் வந்த “போர்த்துக்கீசக்காரயா ரட்டவல்லல் யன்ன  சூரயா” என்ற பாடல் சிங்கள மக்கள் நாவெல்லாம் நடமாடிய பாடல்.

Continue Reading →

ஆய்வு: வில்லிபாரதத்தில் போர்ப்படைகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
வடமொழியில் வியாச மகா முனிவர் அருளிய நமது இதிகாசங்களில் ஒன்றான ‘வில்லிபாரதம்’ என்னும் இலக்கியமாக செந்தமிழில் இனிய செய்யுள்களால் பாடியவர் வில்லிபுத்தூர். சூதின் தீமை, பொறாமை, சகோதரர்களிடையே ஏற்படும் போர் அதன் காரண காரியங்கள் பாரதக் கதையில் மிகவும் அழகாக ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. போர் என்பது விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் இந்த உலகம் எப்பொழுதும் போரைச் சந்தித்துக் கொண்டேதான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மனித மனம் ஒற்றுமை உணர்வை மறுத்து போரே தீர்வு என்ற நிலைமை நோக்கியே பயணிக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில், மனிதனுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கும். தீந்தமிழில் எழுதிய வில்லி பாரதம் ஆகும். போர் என்பது அழிவை ஏற்படுத்தி மனித சமுதாயத்தை சீர்குலையும் என்பதை இன்றைய சமூகத்திற்கு வலியுறுத்தும் காவியமாக விளங்கும். வில்லி பாரதத்தில் போர் நடந்த காலத்தையும் களத்தையும் அறியலாம்.

மனித மனம், மேலோட்ட நிலையில் போரை வெறுக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் அடிப்படையில் இருக்கும் யுத்ததாகனம், நாசவெறி மிருகநிலை இவற்றால் அது எதை விலக்க முற்படுகிறதோ அதையே மீண்டும் மீண்டும் நாடிச் செல்கின்றது. இதற்கு தம் வரலாறே சான்றாகி அமைகின்றன.

வில்லிபாரத போர் காலமும் களமும் :
ஒரு போரின் வெற்றி தோல்வியை வீரம், அறிவு மற்றும் படைபலம் போன்றவை நிர்ணயிக்கும் கூறுகளாக அமைகின்றன. இவை மற்றுமின்றி ஒரு போருக்கான களமும் அமையாவிட்டால் மேற்கூறிய கூறுகள் சரியாக அமையப் பெறினும் என்பது சாத்தியமின்றி ஒன்றாக அமைகிறது.

பாரதப் போரில் அத்தகைய காலமும் களமும் யாருக்குச் சாதகமாக அமைந்தன என்பதையும் அறியலாம். தருமத்தின் வாழ்வு தன்னை எத்தனை சூது கவ்வினாலும் தருமம் மறுபடியும் வெல்லும் என்று தருமத்தைப் பாரதம் வலியுயுத்துகிறது.

மகாபாரதம் காலம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பாண்டுவின் ஐந்து புதல்வர்களாகிய பாண்டவர்களுக்கும் திருதிராஷ்ரனின் நூறு மக்களாகிய கவுரவர்களுக்கும் நாட்டுக்காக நடந்த போரே குருச்சேத்திரப் போர் 18 நாள் நடந்த போரில் கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் அவரது சேனைகள் துரியோதனன் பக்கமும் நின்று போர் புரிந்ததில் பாண்டவர் வெற்றி பெற்றுத் தம் நாட்டை மீட்கின்றனர். துரியோதனனுக்கு ஆதரவராக கர்ணன் போர் புரிந்து மாண்டான். புகழ் வாய்ந்த மகாபாரத நூல் தமிழில் வேறுவேறு வடிவங்களில் வெளிவந்துள்ளது.

Continue Reading →

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியவர்!

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியவர்! ” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். “

இவ்வாறு 48 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத்து இலக்கியஉலகில் முன்னர் வெளியான மல்லிகை இதழில் (1970 செப்டெம்பர்) சொன்னவரும், இலங்கையின் சிங்களத்திரையுலகை வெளியுலகம் வியப்புடன் விழியுயர்த்தி பார்க்கவைத்தவருமான திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார்.

இவ்வாறு தென்னிந்தியப்படங்கள் பற்றிய பார்வையை அன்றே வைத்திருந்த இவர், ஜெயகாந்தனின் முதல் திரைப்படமான “உன்னைப்போல் ஒருவனை” யும் பார்த்திருக்கிறார். அதனை இவருக்காகவே ஜெயகாந்தன் காண்பித்துமிருக்கிறார் என்ற தகவலையும் அதே மல்லிகையில் பதிவுசெய்துள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்களை ஒவ்வொரு இதழிலும் மரியாதை நிமித்தம் அட்டைப்பட அதிதியாக கௌரவித்து அவர்களின் நேர்காணல்களை அல்லது அவர்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. மாவை நித்தியானந்தன், ‘தில்லைக்கூத்தன்’ என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மல்லிகைக்காக லெஸ்டரை நேரில் சந்தித்து எழுதிய குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரையைப்பார்த்த பின்னரே லெஸ்டரின் படங்களை விரும்பிப்பார்த்தேன்.

முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர். லெஸ்டர் பற்றிய சிறந்த அறிமுகத்தை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிவந்துள்ளனர்.

1919 ஆம் ஆண்டில் ஏப்ரில் மாதம் பிறந்திருக்கும் லெஸ்டர், கடந்த ஏப்ரில் மாதம் தனது 99 ஆவது பிறந்ததினத்தையும் கொண்டாடினார். அதனை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் வசித்த திம்பிரிகஸ்ஸாய இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள். நூறு ஆண்டு வயதை நெருங்குவதற்கு 12 மாதங்கள் இருக்கும் தருணத்தில் அவர் இலங்கை கலையுலகிற்கு விடைகொடுத்துவிட்டார்.

Continue Reading →

Sri Lanka: May Day and Workers’ Rights

Sri Lanka: May Day and Workers’ RightsMay Day was declared a holiday in Sri Lanka in 1956 for the government sector, bank and mercantile sectors.  May Day celebrations have never clashed with the interests of or activities conducted during Vesak celebrations. Despite this situation and without consultation, the President has unilaterally decided to postpone May Day on the pretext that there will be a “Vesak Week” this calendar year. A gazette notification issued by Home Affairs Minister yesterday cancelled the May Day holiday which is due on May 1.

The President’s postponement of the May Day celebrations in Sri Lanka to May 7 is allegedly because of a request made by Mahanayaka Theros., This is a crass political ploy of exploiting religious sentiment to inhibit protests of the working people by diverting their attention away from the burning issues of the day. Some of the parties and unions who are supposed to represent workers’ interests have already fallen in line with the government. Others have decided to take their protests to the streets on May 1, despite a municipal ban on marches.

The issue of overlapping of May Day with Vesak Day has arisen many times previously. The façade of religiosity becomes apparent at times when this occurs. In 1967, the UNP regime postponed May Day celebrations to the 2nd of May. As quoted in news reports, the Communist Party (Peking Wing) opposed it and Maithripala Sirisena supported the Communist Party’s decision. Now he himself is displaying his opportunism by postponing May Day celebrations.    Several trade unions in Sri Lanka have strongly objected to this decision to postpone May Day, emphasising that it is a right of workers to celebrate international workers’ day on May 1. The JVP has declared that they will go ahead with the May Day Rally but will hold the Colombo rally on May 7. It is holding its May 1st rally in Jaffna, which is interesting. One could question whether this option is utilised not to confront the issue giving prominence to religion over workers’ rights. According to the JVP, bringing large crowds to Colombo on May Day for celebrations would become an obstacle for Vesak celebrations that will be held in Colombo. This is not the first time the JVP seems to have wavered on this issue. In 2008, the JVP took the initiative to change the May Day from May 1 due to Vesak celebrations, by requesting the government to do so.

This year, Vesak Day does not fall on May 1. The clash is due to the declaration of a Vesak week this year. If the Vesak Week is turned into an annual event, it will be interesting to find out what the JVP position would be. One could easily interpret and equate the JVP position to “killing two birds with one stone”. Thus, they avoid having a May Day rally in Colombo on the May Day itself, despite the relevance of the International Working Day to the working people of the south of Sri Lanka, many of whom reside in Colombo.

Continue Reading →