ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்

- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்

முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும். 

தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )

இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.

முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும்.  அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,

Continue Reading →

கனடாத் தமிழ் இலக்கியத்தில் ‘தாயகம் (கனடா)வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!

'தாயகம்' (கனடா) – எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான ‘கூர் 2018’ இதழில் வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் தவிர்க்க முடியாத , காத்திரமாகத்தடம் பதித்த, ஜோர்ஜ் இ.குருஷேவ்வை ஆசிரியராக கொண்டு வெளியான  சஞ்சிகை, பத்திரிகை ‘தாயகம்’ (கனடா).  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இருந்தும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கட்டுரைகள் எழுதுவோர் தம் கட்டுரைகளில் மிகவும் இலகுவாக மறந்து விடும் பத்திரிகை, சஞ்சிகையும் ‘தாயகம்’ தான். மிகவும் வேடிகையான விடயமென்னவென்றால் ‘தாயகம்’ வெளிவந்தபோது, ‘தாயகம்’ களம் அமைத்துக்கொடுத்துத் ‘தாயக’த்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர்  கூட இவ்விதம் மறப்பதை எண்ணவென்பது. இந்நிலையில் ‘தாயகம்’ பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், அது பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், ‘தாயகம்’ பற்றிய சிறியதோர் அறிமுகம் தேவை என்பதால் உருவான கட்டுரையே இக்கட்டுரை. இக்கட்டுரையின் முக்கிய நோக்கங்களிலொன்று ‘தாயகம்’ பத்திரிகை/ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வுக்கு எதிர்காலத்தில் மேலும் பலரைத் தூண்டுவதாகும்.

‘தாயகம்’ பத்திரிகை /சஞ்சிகைக்கு இன்னுமொரு முக்கியமான சிறப்புண்டு. கனடாவில் இலக்கியச்சேவை செய்வதாகச் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பல பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் பணமீட்டுவதே. விளம்பரங்களால் பக்கங்களை நினைத்து,  இலவசமாக விநியோகிக்கப்பட்டுவரும் கனடியத்தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் , காசு கொடுத்து வாங்கிக் கனடியத்தமிழ் மக்கள் படித்த ஒரேயொரு பத்திரிகை ‘தாயகம்’ (கனடா). இதற்காகத் ‘தாயகம்’ ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வைப்பாராட்டலாம். அதுவும் சுமார் ஆறுவருடங்கள் வரையில் ‘தாயகம்’ இவ்விதம் விற்பனையில் இருந்ததே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகை பல விதங்களிலும் தனித்துவம் மிக்கதாக , ‘உண்மையைத் தேடி’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்தது. அதற்கென்று உறுதியான கொள்கையொன்றிருந்தது. அரசியல் ஆதிக்கம் மிக்க சக்திகளால் மறைக்கப்பட்ட விடயங்களை அது வெளிக்கொணர்ந்தது. அதே சமயம் அது விடுதலைப்புலிகளை விமர்சித்த பத்திரிகை, சஞ்சிகை. அதற்காக அதனைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான பத்திரிகை என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம். அது தமிழ் விடுதலை அமைப்புகளில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையே முக்கியமான நோக்கங்களிலொன்றாகக்கொண்டிருந்தபோதும், அனைத்துப்பிரிவினருக்கும் இடமளித்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களும் ‘தாயக’த்தில் எழுதினார்கள்.

Continue Reading →

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்!

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்! கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய எனது பார்வையைப்பகிர்ந்துகொள்வதற்கு முன் சிற்றிதழ்கள் என்றால் எவை? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். சிற்றிதழ் என்பதற்கு இரு அர்த்தங்களைக் கூறலாம். சிறிய இதழ் என்னுமொரு கருத்தும் உண்டு. இவ்வடிப்படையில்தான் பலர் சிற்றிதழ்களை, சிறுசஞ்சிகைகள் என்று அழைக்கின்றார்கள். சிற்றிதழ் என்றால் சிறந்த இதழ் என்றும் அர்த்தம்கொண்டு அதனை நோக்குவோர் சிலருமுண்டு. உதாரணத்துக்கு “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். ” என்று விக்கிபீடியா சிற்றிதழ்கள் பற்றிக் கூறும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிலக்கியம், சிற்றிதழ், சிற்றன்னை என்பவற்றில் சிறிய எனும் அர்த்தத்திலேயே இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. சிறந்த இதழ் என்றால் சிறப்பிதழ் . சிற்றிதழ் அல்ல. சிறு சஞ்சிகை என்று கூறும்போது அது சஞ்சிகையின் உள்ளடக்கத்தின் தரத்தைக் கொச்சைப்படுத்தி விடுவதாக எதற்காகக் கருத வேண்டும்? சிறு சஞ்சிகை சிறந்த சஞ்சிகையாக இருப்பதில் என்ன தடை இருக்க முடியும்? சிறு சஞ்சிகை என்றாலும் அதன் உள்ளடக்கத்தைப்பொறுத்தவரையில் அது ஒரு பேரிதழ்.

சிற்றிதழ் அல்லது சிறு சஞ்சிகை என்றால் என்ன? அது ஏன் உருவாகின்றது? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம்./

வெகுசன இதழ்கள் , வணிக இதழ்கள் வருமானத்தைக் குறி வைத்து வெளியாகும் இதழ்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு (குறிப்பாக இனம் , மதம், மொழி மற்றும் பால்) , மக்கள் மத்தியில் புகழடைவதுடன , அதிக வருமானத்தையும் பெறும் நோக்குடன் அவை செயற்படுகின்றன; வெளிவருகின்றன. இந்நிலையில் வணிக இதழ்களில் தீவிர , காத்திரமான இலக்கியப்படைப்புகளுக்கு இடமில்லை. இவ்விதமான சூழலில்தான் சிற்றிதழொன்று உருவாகின்றது. காத்திரமான , தீவிரமான கலை, இலக்கிய, அரசியற் கோட்பாடுகளை உள்ளடக்கிய, சார்ந்த படைப்புகளைத்தாங்கிப் பல்வகைச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. சிற்றிதழ்கள் பொருளீட்டி, இலாபம் சம்பாதிப்பதை மையமாக வைத்து உருவாவதில்லை. ஆர்வமுள்ளவர்களில் சிலர் ஒன்றிணைந்து வெளியிடும் இதழாக, அல்லது தனிப்பட்ட  ஒருவர் வெளியிடும் இதழாக இருப்பதால் ஒரு சிற்றிதழானது அது வெளியாகும் காலத்திலிருந்து அதன் முடிவு வரை பொருளியல்ரீதியில் போராடவே வேண்டியிருக்கின்றது. வாசகர்களை, புரவலர்களை நம்பியே, நாடியே அது இயங்க வேண்டிய சூழலும், தேவையுமுள்ளதால்தான் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பு மூச்சடங்கிப்போகின்றன. அவ்விதம் அவை இயங்காது போயினும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்புகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன. கலை, இலக்கிய வளர்ச்சியில் அவை படிக்கட்டுகளாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு மணிக்கொடி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து, இலங்கையில் வெளியான மறுமலர்ச்சி, அலைகள், தீர்த்தக்கரை,  ஜோர்ஜ் இ.குருஷேவின் தாயகம் (கனடா) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Continue Reading →

நினைவு அஞ்சலி: முதுகிலே குத்தியவரை இனம் காட்டியவர் யுகமாயினி சித்தன்.

அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்! கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன்! தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார்!குரு அரவிந்தன்யுகமாயினி இதழ் தொடங்கிய போது, சுமார் பத்து வருடங்களுக்கு முன், சித்தன் பிரசாத் என்பவர் பிரதம ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த இலக்கி ஆளுமை கொண்டவர் என்றும் அவரைப்பற்றிய அறிமுகம் எழுத்தாளர் கே.ஜி. மகாதேவாவிடம் இருந்து கிடைத்தது. முடிந்தால் யுகமாயினிக்கு ஆக்கங்கள் ஏதாவது அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். தமிழ் நாட்டு வர்த்தகப் பத்திரிகைகளுடன் போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து வைத்திருந்தாலும், ‘நல்ல முயற்சி எனது வாழ்த்துக்கள்’ என்று பாராட்டி, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். ரொறன்ரோ முருகன் புத்தக சாலையில் யுகமாயினி கிடைத்ததால், தரமாக இருந்ததால் அவ்வப்போது அதை வாங்கி வாசிப்பேன்.

ஒருநாள் எழுத்தாளர் கே. ஜி. மகாதேவாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. யுகமாயினி இதழ் குறுநாவல் போட்டி ஒன்ற நடத்த இருப்பதாகவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளும் படியும் கேட்டிருந்தார். கனடிய சூழலை கருப்பொருளாகக் கொண்டு எழுதி அனுப்பவா என்று கேட்டபோது, ஈழத்து நிலைமையைச் சிற்றிலக்கியப் பத்திரிகை படிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அங்கு எதிர்கொண்ட உங்கள் அனுபவத்தைக் குறுநாவலாக எழுதுங்கள் என்றார். அதேசமயம் எழுத்தாளர் எஸ். பொ. அவர்களிடம் இருந்தும் இது பற்றிக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்திருந்தது. ஏற்கனவே ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வர்த்தக இதழ்களில் ஈழத்து யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நான் எழுதிய சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்திருந்தாலும், இது குறுநாவல் என்பதால், யுத்தம் ஈழத்தமிழருக்குத் தந்த வலியை, அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக எழுதலாம் என்ற நோக்கத்தோடு இந்தப் போட்டியில் பங்கு பற்றினேன்.

யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, ஒரு ஈழத்துத் தாயின் வலிகளை எடுத்துச் சொன்ன ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் அப்படித்தான் உருவானது. போட்டியில் எனது குறுநாவலுக்குப் பரிசு கிடைத்திருப்பதாக யுகமாயினி ஆசிரியர் சித்தன் அறிவித்திருந்தார். போட்டியின் போது, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவருடன் உரையாடிய போது அந்தக் குறுநாவல் பற்றி என்னைப் பாராட்டியிருந்தார்.

Continue Reading →

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கம், மக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திபில் நண்பர் செல்வம் மற்றும் எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் போல் சத்தியநேசன் அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித்தன் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் முக்கியமான விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

Continue Reading →

‘புதுசு’ நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

இன்று மாலை தற்போது கனடா விஜயம் செய்திருக்கும் ‘புதுசு’ சஞ்சிகையின் ஆசிரியர்களிலொருவரான கவிஞர் நா.சபேசனுடன் கழிந்தது.  நண்பர் எல்லாளனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். ‘5ஸ்பைஸ்’ உணவகத்தில் எம் சந்திப்பு நிகழ்ந்தது. கள்ளங்கபடமற்ற புன்னகையுடன் கூடிய முகத்தோற்றம் மிக்க நா.சபேசனுடன் உரையாடுவதும்  இனியதோர் அனுபவம்தான். கலை, இலக்கியம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துகளும், நனவிடை தோய்தல்களுமாக நேரம் கழிந்தது. நண்பர் எல்லாளன் எண்பதுகளில் தமிழகத்தில் கழிந்த தன் நினவுகளையும் நினைவு கூர்ந்தார்.

Continue Reading →

நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை

  -  நடேசன் -– அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல்,  இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை –

நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம்

ஹோமரின் இலியட் மற்றும்  ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.

மிருகங்களை பாத்திரமாக்கிய  ஐதீகக்  கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே  இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள்,  வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன்,  சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது.  காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.
வங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது,  புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வங்காளிகளான ரவீந்திரநாத் தாகூர்,  சத்யஜித்ரேய் போன்றவர்கள் சர்வதேசப் புகழையடைந்தது தற்செயலான சம்பவமல்ல. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்க பல வருடங்கள் முன்பாக வங்காளத்தில்  நாவலிலக்கியம் (1865 துர்கேசநந்தினி) தொடங்கிவிட்டது. முகமதிய படையெடுப்பு முக்கிய கருவாக  அமைந்தது.

வங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மனஓட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.  பாதர் பதஞ்சலி (1929 )அபராஜிதா(1933) கவிபூதிபூஷண் (Bibhutibhushan Bandyopadhya) போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே.

இவர்களை அடியொற்றித் தோன்றிய  நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி  நாவல், தற்போதைய வங்காளதேசம் எனப்படும் அக்கால கிழக்கு வங்காளத்தில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த கதையைச் சொல்கிறது .

Continue Reading →

பெண்ணின் முதன்மைக் கடமை

பெண்ணின் முதன்மைக் கடமைஇந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா? பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உருவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப்  பேணிப்பாதுகாக்க முடியும்.

ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.

சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

Continue Reading →

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் ஆகும்.  இது வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் திருவடியிலிருந்து நீர் ஊறுவதால்  திருஊறல் என்று இத்தலம் பெயர் பெற்றது. கோவில் அருகே கல்லாறு பாய்கிறது என்பது மட்டுமல்ல  கூவமும் கொசத்தலையும் பிரிகின்ற கேசாவரம் அணையும்  4 கி.மீ .தொலைவிலுள்ளது. இக்கோவில் கருவறை சுற்றி பல்லவர்கால உருளைவடிவத் (cylindrical) தூண்களை பெற்றுள்ளது. கருவறை புறச்சுவரில் பல அரசர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன்றி  பிரகார நெடுஞ்சுவரிலும் பல கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்த்து 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும் உள்ளது.                          

கருவறைசுற்று உருள்வடிவத்  தூண் / கல்வெட்டு சுவர்

S.I.I. Vol 12 Pg 53 No 104 தக்கோலம் ஜலநாத ஈசர் மேற்கு கருவறைப் புறச்சுவர்

1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு நாலவ
2.  து சோழநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து புலியூ
3. ர் புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் திருவூ
4. றல் மஹாதேவர்க்கு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்
5. க்கு வைத்த ஆடு _ _ _ _

விளக்கம்: கூற்றம் என்ற சொல்லை வைத்து பார்க்கும் போது 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு போலத் தெரிகின்றது. சோழவேந்தன் யார் என்று தெரியவில்லை. (இராசராசன் இராசகேசரி எனப்பட்டான். இராசேந்திரன் பரகேசரி என்று அழைக்கப்பட்டான்). ஆனால்அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் சோழநாட்டின் வண்டாழை வேளூர் கூற்றத்தில் அடங்கிய புலியூரைச் சேர்ந்த புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் என்ற மூன்றாம் அதிகாரப் பொறுப்பு அரசன் திருவூறல் ஈசனுக்கு நந்தா விளக்கு எரிப்பற்கு கொடுத்த ஆடு 90 அல்லது 96 என்ற எண் பகுதி சிதைந்துள்ளது. தேவார காலத்தில் திருவூறல் என்று மட்டுமே இருந்தது பின்பு தக்கோலம் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

S.I.I. Vol 3 எண் 166

தக்கோலம் ஜலநாத ஈசுவரர் சன்னதி வடக்கு சுவர் கல்வெட்டு

Continue Reading →