ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.

நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.

நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.

Continue Reading →

ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள்

இடமிருந்து வலமாக: ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், அகஸ்தியர் & நவஜோதி யோகரட்னம்

என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை அறிய வந்தேன். லண்டனிலிருந்து ராஜேஸ் பாலா என் தந்தையைச் சந்திப்பதற்காக அடிக்கடி பாரிஸிற்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கிய அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போது ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அகஸ்தியரையும் ராஜேஸ் பாலாவையும் இணைத்த ஒரு புள்ளி இலக்கியத்தில் அவருள் கொண்டிருந்த முற்போக்கு அணுகுமுறையாகும்.

இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து அகஸ்தியர் எழுதிய எழத்துக்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. பாரிஸில் ‘தாயகம்’ என்ற சஞ்சிகையில் எழுதிய ‘சுவடுகள்’ என்ற தொடர் நாவல் இடையில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே நிலைமையை ராஜேஸ்வரியும் எதிர்கொண்டிருந்தார். அவரது முற்போக்கு சார்ந்த எழுத்துக்களுக்கு திட்டமிடப்பட்ட இருட்டடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என் தந்தை அகஸ்தியர் ராஜேஸ் பாலாவின் மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு பெண் எழுத்தாளராக முற்போக்கு பாதையில் பயணித்ததிற்கு அகஸ்தியர் உயர்ந்த கௌரவம் கொடுத்திருந்தார். பெண்களின் எழுத்தாக்க முயற்சியில் அவர் எப்போதுமே கொண்டிருந்த பேரார்வத்திற்கு இது இன்னுமொரு சாட்சியமாகும்.

Continue Reading →