மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.!

‘ஈழத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் பலர் குறித்த தகவல்களை இளங்கோவன் திரட்டித் தந்திருக்கிறார். ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” நூலை வாசிக்கும்போது வியப்பாகவிருந்தது. சீனப் பெருந்தலைவர் மாஓவினால் பாராட்டப்பட்ட தோழர் சண்முகதாசன், மக்கள் இலக்கியக் கர்த்தா கே. டானியல், புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, தமிழறிஞர் சிவத்தம்பி, அன்று தென்தமிழகத்தைக் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் தன்குரல்வளத்தால் எம்மைச் சொக்கவைத்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், சீனாவில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றிய வீ. சின்னத்தம்பி, ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ்பெற்ற அழகுசுப்பிரமணியம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளைப்பற்றி, அவர்களுடன் பழகிய அனுபவங்களைச் சிறப்பாக நூலில் தந்துள்ளார் வி. ரி. இளங்கோவன். புலம்பெயர்ந்த ஈழத்து இளந்தலைமுறையினர்  மாத்திரமல்ல நாமும் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். சிறந்த ஆவணமாகவுள்ள இந்நூலை அளித்த இளங்கோவன் எமது பாராட்டுக்குரியவர். நூலை அச்சிட்டு வெளியிட்ட மதுரை தழல் பதிப்பகம் இத்தகைய நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் ” இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் 23 -ம் திகதி (23 – 12 – 2019) நடைபெற்ற ‘நூல் அரங்கேற்றம்” நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் மூரா குறிப்பிட்டார்.

Continue Reading →

கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி

கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியம், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்கள் சிலருக்கு 2019 – 2020 ஆண்டிற்கான சில மாதங்களுக்குரிய நிதிக்கொடுப்பனவை வழங்கியது. இந்நிகழ்வு,  கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தில் ( தமிழ் பிரிவு)  கோட்டக்கல்வி அதிகாரி திரு. எஸ். சரவணமுத்து அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

Continue Reading →