தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி

மீள்பிரசுரம்: தினமலர்.காம்
கனிமொழி கைது.கனிமொழி கைது; கவலையில் கலைஞர்“ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது’ என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், “கூட்டுச்சதி செய்தவர்’ என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். “ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல’ என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Continue Reading →

பாவாணரின் மடல்கள் அறிமுகமும் ஆய்வும்

மொழிநூலறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் தமிழநம்பிமாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.  பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத்  தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம். 
 
மடல் ஊடகத்தின் சிறப்பு
இயல்பாகவே நாம் பேசுகின்ற நிலையைவிட, எழுதுகின்ற நிலையில் பிழையின்றியும், அழகிய சொல்லிய அமைப்புக்களோடும் செப்பமாக இருக்கக் கவனம் கொள்கிறோம். கடிதம், இலக்கு நோக்கிச் செலுத்தும் அம்பைப் போல், ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையோ விளித்து, உணர்வார்ந்த கருத்துகளைச் சொல்லும்போது எண்ணியவாறு பயன் விளைகின்றது என்பதனால் இந்தக் கடிதம் எழுதி கருத்துரைக்கும் உத்தி, இன்றளவும் பலராலும் கையாளப்படுகின்றது.

Continue Reading →

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programmeநிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme
20.5.2011 வெள்ளி மாலை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 வரை; இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை

சமகால ஈழ நாடகம் : கலந்துரையாடல்; உரையாடுவோர்: இங்கிலாந்திலிருந்து க. பாலேந்திரா கலந்து கொள்கிறார். பாலேந்திரா இலண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நெறியாளர். கடந்த பல தசாப்தங்களாகச் சளையாது இலங்கையிலும் புகலிடத்திலும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். புகலிட தமிழ் குழந்தைகளுக்கான நாடகப்பள்ளி இவரது முக்கியமான பங்களிப்பு.

Continue Reading →

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா, கவிஞர் வைரமுத்து, டைரக்டர் வெற்றி மாறனும் விருது பெற்றனர். ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்குச் சிறப்பு விருது

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் கவிஞர் ஜெயபாலன்தேசிய விருதுகளைப் பெறும் தனுஷ், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் வைரமுத்து[புதுடெல்லி, மே.20, 2011] டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். 58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.  ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

Continue Reading →

பிரமிளின் புனைவுலகு

பிரமிள்[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, ‘குவாண்டம்’ இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார்.  இதனைத்தான்  ‘விஞ்ஞானம் – ஞானம் – விபூதிப்பட்டை’, ‘விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்’ போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில ‘பதிவுகளி’ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்]

Continue Reading →

Sri Lanka’s war : Two years on

From http://www.economist.com
Gordon WeissBook: 'The Cage' By Gordon Weiss[May 19th 2011] MAY 19TH is the second anniversary of the Sri Lankan government’s announcement that its forces had killed Velupillai Prabhakaran, leader of the rebel Liberation Tigers of Tamil Eelam. It marked the government’s definitive victory in a bloody 26-year civil war—one, moreover, that analysts, including this newspaper, had for years argued could never be won. Yet in the end victory was so complete that peace already seems permanent. A book, published this week, by Gordon Weiss, the United Nations’ spokesman in Colombo in the final stages of the war, (“The Cage”*) is an excellent account of how that victory was won, and of the price paid for the present peace by Sri Lankans from the Sinhalese majority as well as the Tamil and Muslim minorities. Despite all the horrors around the world since then, many will recall the sense of outraged helplessness felt internationally in the final months of the war. Their beleaguered forces, having in effect taken hundreds of thousands of civilians hostage in a dwindling patch of northern Sri Lanka (“the cage”), were pounded relentlessly. So were the civilians.

Continue Reading →

‘Sinhalisation’ continues, not only in Jaffna, but also in Colombo

From http://transcurrents.com
Dushy RanetungeI went to sleep last week living down Havelock Road and woke up in the brand spanking spruced up renamed SSJ Mawatha. The Sinhalese are a minority within the city limits of Colombo. Those who are Buddhists among them are even a smaller minority. No one had consulted the residents of Havelock road about the change of name of their road. They had no voice. Within the last few months we had witnessed Dickman’s Road becoming Lester James Pieris Mawatha, Guildford Crescent to Premasiri Kemadasa Mawatha etc. The residents of these roads also had no choice on the matter. It was imposed from above. Under the present regime, “Sinhalisation” continues, not only in Jaffna, but also in Colombo. The masses, climbed into an array of vehicles, some parents had kids sitting in the boot of cars as they toured the country viewing the many Vesak spectacles and queuing up outside the generous dansala’s. It took me six hours to drive from Kandy to Colombo. As I observed the thousands of children, grannies and entire families taking their lives into their hands by travelling at the back of tractors, half trucks, etc the police looked the other way. The law is an Ass, they say. But here in Sri Lanka, not only the law, the entire law enforcement system, seem to be braying Asses. What amazed me was the site of adults, presumably parents, sitting inside a car, while their children were sitting inside the boot with their legs hanging out. They were travelling on the crowded Colombo-Negombo Road. Sri Lankans seemed unaware or unwilling to recognise the dangers to themselves and to others. For this great majority, Havelock Road becoming SSJ Mawatha was a cause for celebration. They saw nothing wrong in not consulting the residents of the street, where their majoritarian “identity” was being “imposed” without consultation.

Continue Reading →

பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் (Integrating) அவசியம்

‘ஊடறு’ தளத்திலிருந்து மீள்பிரசுரம்!
  சாந்தி சச்சிதானந்தம் அறிமுகம் இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு  உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக்கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறுஉருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது  கையாளுகின்றது. 

Continue Reading →

இலண்டனில் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்!

ஜூன் 12, 2011
அருந்ததி ராய் யேன் மிர்தால் வசந்த இந்திரா மோகன்பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்: மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்; தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades, உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர். யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர், இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர். வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan), இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-  (Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்

Continue Reading →

Sri Lankans and MPs to gather in London to mark end of civil war and renew calls for inquiry into war crimes allegations

http://www.guardian.co.uk
The Tamils’ vigil in Trafalgar Square marks the second anniversary of the end of the 26-year civil war. Both sides of the conflict have been accused of rights abuses. Thousands of Tamils will hold a vigil in Trafalgar Square on Wednesday evening to mark the second anniversary of the end of the civil war in Sri Lanka and to call for an independent international investigation into allegations of war crimes and human rights abuses. As many as 40,000 non-combatants died in spring 2009 as the Sri Lankan government moved to crush Tamil Tiger separatists and end the island’s 26-year conflict. Evidence of atrocities on both sides has emerged. Government soldiers have been accused of shelling hospitals, targeting civilians and attacking aid workers, while rebels are said to have used civilians as shields and shot those attempting to flee the fighting. A UN report last month accused both sides of potential war crimes, but its findings were dismissed as “baseless, biased and unilateral” by the Colombo government, which also tried to stall its publication.

Continue Reading →