Satyendranath Bose: Higgs-Boson’s Forgotten Hero

Satyendranath BoseJuly 7, 2012- The world is celebrating the discovery of the sub-atomic particle at CERN, Geneva, which many believe could well be the long sought after Higgs-Boson. This particle is also called the ‘God Particle’ because its existence is fundamental to the creation of the universe. School physics teaches us that everything is made up of atoms, and inside atoms are electrons, protons and neutrons. They, in turn, are made of quarks and other subatomic particles. Scientists have long puzzled over how these minute building blocks of the universe acquire mass. Without mass, particles wouldn’t hold together and there would be no matter.

Higgs-Boson
One theory proposed by British physicist Peter Higgs and teams in Belgium and the United States in the 1960s is that a new particle must be creating a “sticky” field that acts as a drag on other particles. The atom-smashing experiments at CERN, the European Center for Nuclear Research, have now captured a glimpse of what appears to be just such a Higgs Boson like particle.

Continue Reading →

மௌனங்களால் நிறையவே பேசியிருக்கிறார் துஸ்யந்தன்! வெற்றிவேல் துஸ்யந்தனின் மொழிபெயர்கப்பட்ட மௌனங்கள் மீதான விமர்சனப் பார்வை!

மெளனங்களால் நிறையவே பேசியிருக்கிறார் துஸ்யந்தன்.  துஸ்யந்தனுடய மொழி பெயர்க்கப்பட்ட மெளனங்கள் கவிதை தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது என் மனதில் தோன்றியது இது தான்.மெளனங்களால் நிறையவே பேசியிருக்கிறார் துஸ்யந்தன்.  துஸ்யந்தனுடய மொழி பெயர்க்கப்பட்ட மெளனங்கள் கவிதை தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது என் மனதில் தோன்றியது இது தான்.மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வடிவம்  கவிதை ஆனாலும் அது தோன்றுகின்ற கால அரசியல் சூழ்நிலைகள் அதன் பாடு பொருளை தீர்மானிக்கிறது. பல செய்திகளை உணர்வு கொந்தளிப்புகளை மெளனமாகப் பேச வேண்டிய காலத்தில் எழுந்த கவிதைகள் இவை. எனவெ சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி விடாது சொல்ல முடிந்ததைக்கொண்டு நிறைய சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்  துஸ்யந்தனுக்கு அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை காட்டுகிறது மொழிபெயர்கப்படாத மெளனனங்கள். கவிஞருடைய இளமைக்காலம் பெரும்பாலும் போர்ச்சூழலுக்குள் நகர்ந்திருக்கிறது இறப்பு பற்றிய அச்சமும் வாழ்வின் நிச்சயமின்மையும் எதிர்காலம் சிதைந்து போயுள்ளதென்ற விரக்தியும் .இவரையொத்த இளைஞர்களைப்போலவே இவருக்கும் உரியதாயிற்று  .இதுவே இவரது கவிதைகளைப் பிரசவித்தன. தமிழ் சமுகத்தின் மீது திணிக்கப்பட்ட போர் அவலங்களும் பாதிப்புக்களும் இவரது கவிதைகளில் பதிவு செய்யபடுகின்றதென்றவகையில் இத்தொகுதி ஒரு வரலாறாகிறது. இத்தகைய பின் புலத்தில் இவரது கவிதைகள் அதனுடைய மொழி அரசியல் பற்றி  கவிதைகள் ஊடாக நோக்குதல் பொருத்தமென நினைக்கிறேன்.

Continue Reading →

அமைதிக் குழு (Peace Gang) புகைப்படக் கண்காட்சி

சனி, ஜூலை 7, 2012 - யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.சனி, ஜூலை 7, 2012 – யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஆங்கில நிகழ்ச்சித் திட்டமே இந்த கண்காட்சியின் ஆரம்ப நோக்கமாக அமைந்திருந்தது. குறித்த பயிற்சியாளர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்காளிகளாக இருந்து வழிப்படுத்தியுள்ளனர். இதில் சிறுவர்களின் ஓவியங்களும் அவர்கள் எடுத்த ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒளிப்படங்கள் யாவும் தொண்டைமானாறு பிரதேசத்தினை மையமாகக் கொண்டதாகவே இருந்தன. வழிகாட்டிகளின் துணையுடன் ஒளிப்படக்கருவிகளை அவர்களிடமே கொடுத்து கிராமத்தின் பலம் பலவீனங்களை இனங்கண்டு அவைபற்றி சில வரிகளையும் எழுதி அவை காட்சிப்படுத்தப்பட்டன. படங்களுக்கான விளக்கம் தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தன.

Continue Reading →