மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆருடம் (33 & 34)

அத்தியாயம் 33

வெங்கட் சாமிநாதன்கடைசியில் கடம்மாவைக் கூட்டிவர அவள் வேலை செய்யவிருக்கும் ஷேக் வீட்டிலிருந்து ஷேக்கின் அப்பனும் அந்த வீட்டு ட்ரைவரும் வந்து அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் சேக்கின் அப்பனான கிழவன் அஸ்வினியைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருகிறான். அவ்வப்போது தன் கைத்தடியால் டிரைவரைக் குத்திக்கொண்டே வருகிறான். ட்ரைவர் உஸ்மானும்  மலையாளிதான் முஸ்லீம். முஸ்லீமேயானாலும் அவன் அங்கு வயிறு பிழைக்க வந்தவன். வேலைக்காரன் தான். அயல் நாட்டு வேலைக்காரன். ஆனால் ஷேக் ஒரு சௌதி. கொள்ளை பணக்காரன். பெட்ரோல் தரும் பணம். அதில்லாத ஒரு காலத்தில் சௌதிகள பழங்குடி இன  மக்களைப் போல வாழ்ந்தவர்கள். அந்த பழங்குடி இனத்தின் வாழ்க்கைக் கூறுகள் இன்னமும் தொடர்ந்து வரும் விந்தையான நாகரீகம் அவர்களது எந்தத் தண்டனையும் சாட்டையடிகள் இத்தனை என்று தான் ஆரம்பிக்கும்.  கொள்ளையாகக் குவியும். பணம் இன்னும் கொடூரத்தை அதிகரிக்கவே செய்யும். டிரைவர் மலையாளத்தில் தன் கிழட்டு முதலாளியைப் பற்றிக் கேவலமாகவும் கேலியாகவும் காரில் வரும் போது அவ்வப்போது அஸ்வினிக்குச் சொல்லிக்கொண்டு வருவான். அவர்களது மாளிகை வந்ததும் இளைய ஷேக் அஸ்வினி உள்ளே நுழையும் முன் அவளிடமிருந்து பாஸ் போர்டை வாங்கி வைத்துக்கொள்வான். இனி அவன் அனுமதி இன்றி அவள் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்க முடியாது. அவனுக்குத் தெரியாமல் ஓடிவிடமுடியாது. இனி அவள் அந்த வீட்டுக்கு  வந்து சேர்ந்துள்ள ஒரு அடிமை தான்.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிதோழர் கு. சின்னப்ப பாரதி நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலில் தோழர் வி. ரி. இளங்கோவன்ää பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட்; கட்சி – மார்க்சிஸ்ட் – கட்சிகளுக்கிடையிலான நல்லுறவு, இலக்கியப் பரிமாற்றம், சர்வதேச நிலைமைகள், உலக மயமாக்கலின் விளைவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட  கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவலை பிரெஞ்சு மக்கள் மத்திக்கு பரவலாக எடுத்துச்செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாரிஸ் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டார். பாரிஸ் மாநகரில் வாழும் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினர். ஒரு வாரத்தின்பின் நெஞ்சம் நிறைந்த தோழமை உணர்வுகளைச் சுமந்தவாறு தோழர் கு. சின்னப்ப பாரதி தமிழகம் திரும்பினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் சார்பில் தோழர் வி. ரி. இளங்கோவன் ஒழுங்குசெய்த, பாரிஸ் மாநகரில் கடந்த 15 -ம் திகதி (15 – 07 – 2012) நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும் கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவல் வெளியிடப்பட்டது. தோழர் பியர் மார்சி (Pierre Marcie) இந்நாவல் குறித்து இங்கு சிறப்புரையாற்றினார். தோழர் கு. சின்னப்ப பாரதியின் பாரிஸ் பேச்சுவார்த்தைகள் யாவற்றுக்கும் தோழர் வி. ரி. இளங்கோவன் உடனிருந்து உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →