இயல் விருது 2012: வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது!

இயல் விருது 2012: வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது! கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2012.

Continue Reading →

உரையாடல்! பகிர்வு! கற்றல்! [ 21 ஜுலை 2012 ]

உரையாடல்! பகிர்வு! கற்றல்! [ 21 ஜுலை 2012 ]நண்பர் /நண்பிகளுக்கு…….

“ஜூலை” மாத நிகழ்வு விபரம்!

நூல் அறிமுகம்: *வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்(நூல் அறிமுகம்) வழிப்படுத்துகை- ந.ஜெயபாலன்

உரைகள்-
வி-லோகநாதன் (ஜேர்மன்)
ரி-குகதாசன்

சந்திப்பு
* பெண் எழுத்தாளருடனான சந்திப்பு: சுகி  கணேசானந்தன்- அமெரிக்கா

நாவலாசிரியர் ,சமூக செயற்பாட்டாளர்
வழிப்படுத்துகை-
  நிர்மலா இராஜசிங்கம்
காலம்– 21 ஜுலை 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)

இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London

Continue Reading →