காஞ்சிபுரம் தொல்லியல் அகழாய்வு

[ இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ]

காஞ்சிபுரம் தொல்லியல் அகழாய்வு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1970 முதல் 1976 வரை பற்பல பருவங்களில் காஞ்சிபுரத்தில் தொல்லியல் அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்துடனான பல்லவர் கூட்டு என்பதில் கவனம் குவிக்கும் நோக்கில் பேராசிரியர் முனைவர் டி. வி. மகாலிங்கம் தலைமையில், பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியும் இணைந்து, தொல்லியலாளரும், தொழினுட்பரும் (technicians) கொண்ட ஒரு அணி  இந்த அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள முதுபழமை வாய்ந்த சங்கர மடமும் காஞ்சிபுரத்துடனான தன் கூட்டு அதன் தொடக்கம் முதலே இருந்தது என்ற கோருரிமைகளைக் (claims) கொண்டிருந்தது.

Continue Reading →

பாரதி அன்பர்களுக்கு…

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh9.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.அன்புடன்,வீ.சு.இராமலிங்கம்தஞ்சாவூர்

Continue Reading →

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு

பகுதி ஒன்று

எழுத்தாளர் தேவகாந்தன்(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன். – தேவகாந்தன் –)   புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.  புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிரு~;ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.

Continue Reading →

சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி (2)

- வெங்கட் சாமிநாதன் -டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் காணும். அவர் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கேட்க  வேண்டுமானால், கிஷோரி அமோன்கர் கச்சேரி துவங்கக் காத்திருப்பது  மாதிரி தான். கூட்டம் சேர, அமைதியாக இருக்க வேண்டும். வந்து உட்கார்ந்தால் ஒரு பார்வை சுற்றுமுற்றும் ஒருத்தரும் எழுந்து போகக் கூடாது. ஒரு இருமல், தும்மல் கூடாது. பின் சுருதி சேர வேண்டும். தம்பூரா ஸ்ருதி மாத்திரம் இல்லை. மனத்தின், ஹாலின், சுற்றுச் சூழலின்,. சுருதி கூட சுத்தமாக இருக்க வேண்டும். அப்பத் தான் கிஷோரிக்கு இங்கு பாடலாம் என்ற நிம்மதி பிறக்கும்.  பின் மெதுவாக ஒரு இழை சன்ன குரலில் எழும்.  இதே மாதிரி இல்லை. கிட்டத்தட்ட இதே காத்திருத்தல் டண்டன் வாய் திறக்கவும் வேண்டும். ஏதும் அபஸ்வரம் யாரிடமிருந்தும் வராது என்ற நம்பிக்கை அவரிடம் துளிர்க்க வேண்டும். பின் ஏதோ சொல்லியும் சொல்லாமலும் ஒரு இழை சன்னமாக வெளிப்படும். அது தான் அவரும் சகயாத்திரிகர் தான் என்று நமக்குச் சொல்லும். இவரைப் போய் எங்கள் சைபர் செக்‌ஷன் அதிகாரி பி.எஸ். ஸின் முன்னிலையில் மணிக்கணக்காக உட்கார வைக்கும் கொடுமையை என்ன சொல்வது? அதையும் டண்டன் அமைதியாக சகித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடுமையை என்ன சொல்வது?

Continue Reading →

தமிழகமும் இந்தியப் பேராழியும்

நன்றி: விக்கிபீடியாகன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது.  இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது.  இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் “Outline of History” என்ற நூலுள்  உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம்  இருந்தது.

Continue Reading →