வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் ‘நீர்த்துளி’ நாவல் ஒரு மதிப்பீடு)

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி' நாவல்  ஒரு மதிப்பீடு)  சுப்ரபாரதிமணியன்வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான ‘நீர்த்துளியை’ வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.

Continue Reading →

குழந்தைகள் குறும்பட விழா!

திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல்  வெள்ளியன்று நடைபெற்றது.புதுவை யுகபாரதி, திருப்பூர் திருநாவுக்கரசு, கோத்தகிரி தவமுதல்வன் உட்பட பல குறும்பட இயக்குனர்கள்…

Continue Reading →

சுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது

திருப்பூர்  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை  கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ்…

Continue Reading →