மீள்பிரசுரம்: அக்டோபர் புரட்சியின் நினைவாக ……….

தேசிய இனப்பிரச்சினையில்–சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
 
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் “கோட்பாட்டு உருவாக்கம்” முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் – சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.

Continue Reading →

முனைவென்றி நா. சுரேஷ்குமாரின் கவிதை நூல் வெளியீடு!

அனைவருக்கும் வணக்கம், கடந்த 19-10-2012 அன்று என்னுடைய கவிதைநூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் திரு. வதிலைபிரபா அவர்களும், திரு. உதயகண்ணன் அவர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட நினைவுகள். தொடர்ந்த மழை. மறக்க முடியாத அனுபவம். பசுமையான நினைவுகள். மின்னஞ்சல் ஊடாக பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். நானும் நன்றி தெரிவித்தேன். விடுபட்டவர்களுக்கும் சேர்த்தும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.அனைவருக்கும் வணக்கம், கடந்த 19-10-2012 அன்று என்னுடைய கவிதைநூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் திரு. வதிலைபிரபா அவர்களும், திரு. உதயகண்ணன் அவர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட நினைவுகள். தொடர்ந்த மழை. மறக்க முடியாத அனுபவம். பசுமையான நினைவுகள். மின்னஞ்சல் ஊடாக பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். நானும் நன்றி தெரிவித்தேன். விடுபட்டவர்களுக்கும் சேர்த்தும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

கவிதை நூல் கிடைக்குமிடங்கள்:

1. முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
அறை எண் 37,
#53, மில்லத் மேன்சன்,
பெரிய தெரு, திருவல்லிக்கேணி,
(இந்து மேல்நிலைப்பள்ளி எதிரில்)
சென்னை – 600005
அலைபேசி: 8754962106.

Continue Reading →

Remembering Lincoln Alexander: The Honourable Lincoln MacCauley Alexander, PC, CC, OOnt, CD, QC (January 21, 1922–October 19, 2012) · 24th Lieutenant Governor of Ontario

Courtesy: http://www.lt.gov.on.ca/en/LA/LA.aspThe Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario, leads Ontarians in mourning the death of Ontario’s 24th Lieutenant Governor (1985–1991), the Honourable Lincoln Alexander. He is survived by his son, Keith, and second wife, Mrs. Marni Alexander. When Lincoln Alexander entered the Lieutenant Governor’s Suite for the first time in 1985, he might have paused for just a moment. He was, after all, about to enter not just a new and imposing office, but also an important phase of his own life—and in Ontario’s history. He was a man accustomed to breaking new ground: he became the first black person installed as the Queen’s representative in Ontario. Born in 1922 in Toronto, he was the son of West Indian immigrants—his father a railway porter and his mother a maid. Alexander served with the Royal Canadian Air Force during the Second World War. In 1948 he married Yvonne Harrison, who remained a pillar of strength for her extraordinary husband until her death in 1999. Alexander was educated at McMaster University, and later went on to study law at Osgoode Hall. Elected as an MP for Hamilton West in 1968, he was Canada’s first black person elected to the House of Commons. He remained there for 12 years. He made history again in his final year in Parliament, when he became Canada’s first black cabinet minister, having been appointed Minister of Labour.

Continue Reading →

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்குத் தலைக்கோல் விருது.

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்குத் தலைக்கோல் விருது. கே.எஸ்.பாலச்சந்திரன்சென்ற ஞயிற்றுக்கிழமை கனடாவில் உள்ள ஸ்காபரோ விலேச் கொம்யுனிற்ரி மண்டபத்தில் ((Scarborough Village Community Center) குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் வைபவம் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் வரலாற்றுப் பதிவான ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ என்ற பாராட்டு நூலும் சோக்கல்லோ சண்முகத்தால் தொகுத்து, மொன்றியல் இரா. நடராஜா அவர்களின் அனுசரனையோடு வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தலைக்கோல் விருது வழங்கும் விழாவை மொன்றியல் இரா. நடராஜா, தா. சண்முகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Continue Reading →

காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் “காலந்தோறும் கம்பன்”

காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் “காலந்தோறும் கம்பன்”

காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் “காலந்தோறும்   கம்பன்” INTERNATIONAL  CONFERENCE ON KAMBAN  AT  ALL  TIMES”:
நாள்:  23 & 24 மார்ச், 2013
இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி 630 001
மின்னஞ்சல் முகவரி: kambantamilcentre @gmail.com       அலைபேசி இலக்கம்:  +91 94450 22137

Continue Reading →

102) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

Continue Reading →

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘வைகறை’ (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா!

'வெலிகம ரிம்ஸா முஹம்மத்'தின் 'வைகறை' (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா!அன்புடையீர், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

காலம்:- 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
நேரம்:- மாலை 4.30 மணி
இடம்:-  பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன  கேட்போர் கூடம், 58, தர்மராம வீதி, கொழும்பு – 06.

தலைமை:- டொக்டர் எம்.கே. முருகானந்தன்

முன்னிலையும், முதற்பிரதியும்:-
புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (21)

21-ம் அத்தியாயம்: குருடனுக்குத் திருமணமா?

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிசிவநேசர் ஆங்கில நூல்களை வாசித்தறிவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வந்தாரோ, அவ்வளவு ஆர்வம் தமிழ் நூல்களையும் வட மொழி நூல்களையும் கற்பதிலும் காட்டி வந்தார். சிறு வயதில் அவரது தந்தையார், அன்று வாழ்ந்த பெரிய இடத்து மனிதரின் வழக்கப்படி தமது வாழ்க்கையையே முற்றிலும் ஆங்கிலமயமாக்கி இருந்தார். அதன் பயனாக வீட்டில் ஆங்கிலத்திலேயே எல்லோரும் பேசினார்கள். பிள்ளைகளின் படிப்பிலும் ஆங்கிலத்துக்கே இடம் தரப்பட்டது. தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களான தலைப்பாகை போன்றவற்றுக்கு ‘அமராவதி’யில் என்றும் முக்கிய இடமிருந்த போதிலும் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடமே தரப்பட்டது. தலைப்பாகை அந்தஸ்தைத் தருவதாகவும், தமிழ் மொழி அந்தஸ்தைக் குறைப்பதாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம். தலையில் தலைப்பாகையும் வாயில் ஆங்கிலமுமே ‘ஒண்ணாந்தர’ அந்தஸ்து என்று எண்ணப்பட்டது. இந்நிலையை மாற்ற அவர்கள் குடும்பத்தில் முதல் நடவடிக்கை எடுத்துக் கொண்டவர் சிவநேசரே.

Continue Reading →

சிறுகதை: புரை

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக பளபளத்துக்கொண்டிருந்தது. இரண்டாமவர் வீரராகவனுக்கும் வழுக்கை இல்லையென்றாலும் கூட,அவரது தலையும் பொல்லென்று சுத்தமாய்  நரை முடிதான்,. இவர்களுக்கே பேரன் பேத்தி பிறந்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த கிழவன், கொள்ளுத் தாத்தாவாய் ,லட்சணமாய், வாழவேண்டிய , இல்லை, , ஒரு மூலையிலாவது முடங்க்கிடக்கவேண்டிய வயசில் போய், இப்படி ஒரு காரியத்தை செய்துட்டாரே? கொஞ்சமாவது பெற்ற பிள்ளைகளோட மான அவமானத்தைப்பற்றி யோசிச்சாரா?  கோபப்படுவதா?  நெஞ்சிலறைந்து கொண்டு அழுவதா?  ? “என்று இரண்டும் கெட்டான் நிலையில் நிலைகுலைந்துபோய் நின்றிருந்த மகன்களை, நெருங்கிய உறவினரான ராஜு மாமாதான் தட்டிக்கொடுத்து , ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பாக, செய்ய வைத்தார்.இதில் சனிப்பொணம் தனியாகப்போகக்கூடாது என்று, கூடவே அதற்கான பரிகாரத்தையும் செய்யவைத்தே,பெரியசாமித் தாத்தாவை, மண்டாய் சுடுகாட்டில், மின்தகனத்துக்கு கொண்டு போனார்கள். அதுவரை தாங்கிக்கொண்டு நின்ற பெரியவர் சரவணனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை.

Continue Reading →