காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.

நிகழ்நிரல்
6.00 மணி – இறைவணக்கம்
6.03 மணி –வரவேற்புரை
6.10 மணி- கம்பன் ஓர் இலக்கணப் பார்வை
திருச்சிராப்பள்ளி தூயவளானர் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் இ. சூசை
7.25 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.55- நன்றியுரை
8.00 மணி- சிற்றுண்டி

Continue Reading →

நூல் அறிமுகம்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்!

நூல் அறிமுகம்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்!இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’  என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம்! இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று  பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து  வைத்துள்ளார் ஆசிரியர்.

Continue Reading →

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி: அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி மற்றும் ஊடக போட்டிகள் பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப் பரிசை  ஆல்பர்ட் ஃபெர்னாண்டோவும், ஹாங்காங் சித்ரா சிவக்குமாரும் பெற்றுள்ளனர். http://tamil.cri.cn/301/2013/10/28/1s133560.htm

Continue Reading →