எகிப்தில் சில நாட்கள் ( 5 )

எகிப்தில் சில நாட்கள் 5கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன சின்னங்களை ஒரு நிலையில் வைத்திருக்கிறது. புராதன கட்டிடங்களுக்கு மனிதர்களால் ஏற்பட்ட அழிவுகள் அதிகம். பிரமிட்டின் மம்மிகளோடு இருந்த செல்வங்களை திருடர்கள் கொள்ளையடித்தனர். பிரமிட்டின் கற்களையும் பளிங்குகளையும் பிற்காலத்தில் வந்த எகிப்திய அரசர்கள் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அழித்தனர். மனிதர்களால் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டபோது இயற்கை பல புராதன சின்னங்களை மண்ணால் மூடியும், வெப்பம் இயற்கையின் நுண்ணுயிர்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

Continue Reading →

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

- வெங்கட் சாமிநாதன் -சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா? நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில்.  பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: மாடிக் கோயில்!

தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய "மகேந்திர வர்மன்" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற ஊரில் பாறைகளை குடைந்து "குடவரைக் கோயில்" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது.தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக…ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய “மகேந்திர வர்மன்” என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் “மண்டகப்பட்டு” என்ற ஊரில் பாறைகளை குடைந்து “குடவரைக் கோயில்” ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது “மாடிபோல் அமைந்த கோயில்” என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள “வைகுண்டப் பெருமாள் கோயில்” மற்றொன்று உத்திரமேரூர் “சுந்தரவரதப் பெருமாள் கோயில்” இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.

Continue Reading →

குளோபல் தமிழ் நியூஸ் (மீள்பிரசுரம்): ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி… என்.சரவணன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

“…15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை… செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்…. …ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது…”

Continue Reading →

சிங்கம் வைத்திலிங்கத்தின் முகநூற் குறிப்பு: அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம்!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.

Continue Reading →