தாயக மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக ரொறன்ரோவில் கண்டனப் பேரணி!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -பொதுநலவாய மாநாடு   நடைபெறுவதற்கு  இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளது.  மாநாடு இந்த வாரம் 15 – 17 வரை கொழும்பில் நடைபெற இருக்கிறது. பொதுநல்வாய மாநாடு சிறீலங்காவில் நடைபெறுவதும் மகிந்த இராசபக்சே தலைமை  ஏற்க இருப்பதும் பன்னாட்டு மட்டத்தில் பலத்த எதிர்ப்பு அலைகளை எழுப்பியுள்ளது. மன்னிப்பு சபை, மனித உரிமை காப்பகம்,  பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்குமாறு  தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளார்.  அவருக்குப் பதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்திஷ் இந்திய குழுவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்  பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேற்று (திங்கட்கிழமை) பொதுநலவாய மாநாட்டை முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Continue Reading →

குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்

குமரன் (பொன்னுத்துரை)தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும்  நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் லா சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் நட்பார்ந்த சூழலில் நிறைவாக நடந்து முடிந்தது. பல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்ட 75 நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமர்வுக்கு தோழர். அசோக் யோகன் தலைமையேற்று தோழர். குமரன் தொடர்பாகத் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குமரனோடு பழகிய பல்வேறு நண்பர்கள் மற்றும் தோழர்களின் குமரன் குறித்த கூட்டுநினவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அசோக் யோகனின் நினைவுகூரல் அமைந்திருந்தது.

” குமரனின் மறைவின் நான்கு மாதத்திற்கு பின்னர் அவரின் வாழ்வை கௌரவிக்கு முகமாக நாம் இன்று   சந்திக்கிறோம். இன்று எமது நோக்கம் வாழ்ந்து மறைந்த குமரனின் வாழ்க்கையை பற்றிய மேலெழுந்தவாரியான போற்றிப் புகழ்தலையோ அல்லது தூற்றுதலையோ செய்வதல்ல. இந்த வகையான அணுகுமுறை அவரின் வாழ்வை வழிநடத்திய புறநிலை விதிகளைப் புரிந்துகொள்வதற்கோ மேலும் இன்றைய இளம் தலைமுறை அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கோ எந்தப் பங்களிப்பையும் செய்யப்போவதில்லை. குமரன் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் 1970 களில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் தலைமுறையை சேர்ந்தவர்களில் ஒருவராக இருந்தார். குமரன் ஒரு அரசியல் மனிதனாக தனது வாழ்க்கையின் பெரும் பகுதியினை வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தங்களும்  உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அது இலங்கையில் உண்டாக்கிய தாக்கங்களோடும் இணைந்து பல வேறுபட்ட பரிணாமங்களை கொண்டதாக இருந்தது. அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தமும் மிகவும் முரண்பட்ட தன்மை கொண்டதாக இருந்தது. அவரது பலத்தையும் பலவீனத்தையும் புறநிலமைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பற்றிய ஒரு கவனமான படிப்பினைக்கூடாகவே அதனை புரிந்துகொள்ள முடியும் ”.

Continue Reading →