ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்கள் கௌரவிப்பு!

ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பு!ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு  International Zentrum – Flachs Markt– 15> 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது.  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை ரவித்துப்பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர். 

Continue Reading →