அறிவித்தல்: அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம்.

இலங்கையில்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களையும் குடும்பத்தின்   மூல  உழைப்பாளியையும்  இழந்து  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்   மெல்பனில்  அண்மையில் Vermont South  மண்டபத்தில்  நிதியத்தின் தலைவர்   திருமதி  அருண். விஜயராணியின்   தலைமையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  தொடக்கத்தில்  போர்களில்  உயிரிழந்தவர்களின்   ஆத்ம சாந்திக்காக   ஒரு  நிமிடம்  மௌன   அஞ்சலி  செலுத்தப்பட்டது. நிதிச்செயலாளர்   திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா   நிதியத்தின்  24  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட    குறிப்புகளையும்  2014-2015   ஆண்டறிக்கை    மற்றும்    நிதியறிக்கைகளை   சமர்ப்பித்தார்.

Continue Reading →