சிறுகதை: வேல்அன்பன்

சிறுகதை: வேல்அன்பன் - எஸ். கிருஸ்ணமூர்த்தி , அவுஸ்திரேலியா -விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தன. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது.  ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.

Continue Reading →

நாற்றமெடுக்கும் தேர்தல்!

நாற்றமெடுக்கும் தேர்தல்!  - மெய்யன் நடராஜ் -

கட்சி விட்டுக் கட்சித் தாவிக்
  காட்ட வந்த தேர்தல்.
கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளிக்
  கொட்ட வந்த தேர்தல்
பெட்டி மேல பெட்டி வைத்து
  பேரம் பேசும் தேர்தல்
மட்ட மான கொள்கை கொண்ட
  மானங் கெட்டத் தேர்தல்

Continue Reading →

சிறுகதை: ஒரு துவக்கின் கதை

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய முறையில் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் துவக்கு வைத்திருக்கலாம். அவ்வாறு அந்த வட்டாரத்திலேயே அப்பாவிடம் மட்டும்தான் துவக்கு இருந்தது. வீட்டினுள் அவனது கைக்கு எட்டாத உயரமாக சுவரில் துவக்கு மாட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது அப்பாவுக்கு எட்டும் உயரம். அதற்காகவென்றே சுவரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆணிகளில்… ஒன்றில் அதன் விசைப்பகுதியைக் கொழுவி, சற்று உயரமாக உள்ள மற்ற ஆணியில் சுடு குழாயைப் பொறுக்க வைத்துவிட்டால்.. துவக்கு எடுப்பாகத் தோற்றமளித்துக்கொண்டிருக்கும். அறையின் ஜன்னல் திறந்திருந்தால் வெளிவிறாந்தையில் நின்றே துவக்கைக் காணலாம்.

விளையாட வரும் நண்பர்களைக் கூட்டிவந்து, அவன் ஜன்னலூடாகத் துவக்கைக் காட்டுவான். வகுப்பிலுள்ள சக மாணவர்களையும் இதற்காகவென்றே விளையாட வருமாறு வீட்டுக்கு அழைத்து வருவான். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய… ‘அட அது உண்மைதான்!’ எனப் பார்த்திருப்பார்கள். வீட்டிலிருக்கும் துவக்கைப் பற்றி அவன் நண்பர்களிடம் பல கதைகளை  அளந்திருக்கிறான். இலக்குத் தவறாமல் சரியாகச் சுடும் லாவகம் பற்றி விளக்கமளித்திருக்கிறான். ‘இந்தப் பெரிய துவக்கை எப்படி நீ தூக்குவாய்?’ எனப் பிரமிப்புடன் அவர்கள் கேட்பார்கள். ‘அது அப்படித்தான்..!’ எனச் சமாளித்துவிடுவான். எப்படிச் சுடுவது என அப்பா தனது நண்பர்களுக்கு விளக்கும்போது கவனித்திருக்கிறான். ‘விசையைத் தட்டி வெடி தீரும்போது ஒரு எதிர்த் தாக்கம் இருக்கும். அப்போது கை தழும்பி இலக்குத் தவற வாய்ப்புண்டு. அதனால் துவக்கின் பிடிப் பகுதியை வாகாக தோள்மூட்டில் பதிய  வைத்துக் கொள்ளவேண்டும்’ என அப்பா தன் நண்பர்களுக்குக் கொடுத்த பயிற்சியை எல்லாம் அவன் தனது நண்பர்களுக்கு எடுத்துவிடுவான்.

Continue Reading →

நூல் நயப்புரை: பத்திரிகையாளனின் அனுபவங்களை புனைவு கலக்காமல் பகிர்ந்து சொல்வதற்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு அப்பாலிருந்து எழுந்திருக்கும் ஆத்மக்குரல் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்.

“சொல்ல மறந்த கதைகள்”  எழுத்தாளர்  திரு.  முருகபூபதி  அவர்களின்  இருபதாவது  நூல் ' ஜே.கே.'  ஜெயக்குமாரன் அப்போது   ஜேவிபி  கிளர்ச்சிக்காலம். 1971ஆம்  ஆண்டு. சரத்ஹாமு   தென்னிலங்கையிலே  ஹக்மண  என்ற  ஊரில் வாழ்கின்ற  தனவந்தர்.  ஊர்  மக்கள்  மத்தியில்  அவருக்கு  நல்ல பெயர்.    கௌரவமாக  வாழும்  குடும்பம்.  சரத்ஹாமுவின்  மனைவி உள்ளூர்   பாடசாலை  ஒன்றில்  ஆசிரியையாக  இருக்கிறார்.  ஒருநாள் அந்தப்பாடசாலையில்  இன்னொரு  ஆசிரியையும்  இணைகிறார். அந்த   ஆசிரியை  அண்மையில்  அந்த  ஊருக்கு  மாற்றலாகி வந்திருக்கும்    இன்ஸ்பெக்டர்  சமரநாயக்காவின்  மனைவி.  நாளடைவில்  இரண்டு  ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள்.  தினமும்  பாடசாலை  முடிந்தபின்  மனைவியை  ஜீப்பில் அழைத்துப்போகவரும்  இன்ஸ்பெக்டர்,  அந்த  தனவந்தரின் மனைவிக்கும்   லிப்ட்   கொடுக்க  ஆரம்பிக்கிறார்.   ஒருநாள்  அப்படி இறக்கிவிடும்போது    உள்ளே போய்  ஒரு  டீயும்  குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும்  தனவந்தர்  குடும்பமும்  நட்பு கொள்கிறது.  டீ  குடிக்க  தினமும்  இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார்.  தனவந்தர்  இல்லாத  டைம்  பார்த்தும் வரத்தொடங்குகிறார்.  இன்ஸ்பெக்டரின்   சரளமான   ஆங்கிலம்,  மிடுக்கான  சீருடை. கம்பீரம்.   சரத்ஹாமுவின்  மனைவியின்  அழகு.  சிரிப்பு … இப்படி  பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும்  சரத்ஹாமுவின்  மனைவிக்கும்  கள்ளத்தொடர்பு  உருவாகிறது. இன்ஸ்பெக்டரின்   கண்  சரத்ஹாமுவின்  மனைவிமீது  மட்டுமல்ல. சொத்திலும்தான்.   சரத்ஹாமுவை  கொலை   செய்துவிட்டு சொத்தையும்   மனைவியையும்  நிரந்தரமாக  சுருட்டலாம்  என்பது அவருடைய   எண்ணம்.  ஜேவிபி  பெயராலே  கொலை  செய்தால் யாருக்கும்   எந்த  சந்தேகமும்  வராது.  பக்காவாக  திட்டம்  திட்டி, ரவுடிகளை  அனுப்பி  தனவந்தரை   கொலை  செய்தும்  விடுகிறார். கொலை   செய்யப்போன  ரவுடி  இலவச  இணைப்பாக சரத்ஹாமுவின்  மனைவியை  பாலியல்  வல்லுறவும்  செய்துவிடவே   பிரச்சனை   சிக்கலாகிவிடுகிறது.  எப்படியே இன்ஸ்பெக்டர்    சாட்சிகளை   மடக்கி,  ஜேவிபி  மீது பழியினைப்போட்டு  தப்பி  விடுகிறார். 

Continue Reading →