திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கை மூதூரில் இழப்புகளே வாழ்வாகிப்போன மூத்த படைப்பாளி வ.அ.இராசரத்தினம் அன்பு மனைவிக்கு அவர் கட்டியது மாளிகையல்ல – இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்!

வ.அ.இராசரத்தினம்முருகபூபதிவீரகேசரியில்   பணியாற்றிய  காலத்தில்  அடிக்கடி  நான்  செய்திகளில்   எழுதும்  ஊரின்  பெயர்  மூதூர்.   ஒரு  காலத்தில் இரட்டை  அங்கத்தவர் தொகுதி.   தமிழர்களும்  முஸ்லிம்களும் புட்டும்   தேங்காய்  துருவலும்  போன்று  ஒற்றுமையாக  வாழ்ந்த பிரதேசம்.  அரசியல்  இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. தமிழ் – முஸ்லிம்  அரசியல்  தலைவர்களும்  அப்பாவி  பொது மக்களும்   அதிக  அளவில்  கொல்லப்பட்டிருக்கின்றனர்.  பல   தமிழ்க்கிராமங்கள்  இந்த  ஊரை   அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு   படகில்  செல்லவேண்டும்  என்றெல்லாம்  சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.   ஆனால்,  நான்  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   திருகோணமலைக்கோ   அதன்  அயல்  ஊர்களுக்கோ சென்றதில்லை.  அதற்கான  சந்தர்ப்பங்களும்  கிடைக்கவில்லை.  1965  இல்   பாடசாலை சுற்றுலாவிலும்    1978   இல் சூறாவளியின் பொழுதும்தான் மட்டக்களப்பை     தரிசித்தேன்.   இலங்கையில்  பார்க்கத்தவறிய  தமிழ் ஊர்களும்  தமிழ்க்கிராமங்களும்  ஏராளம்.  மன்னார்,  திருக்கேதீஸ்வரம்,  திருகோணமலை,  மூதூர்  என்பனவும்  முன்னர் எனது    தரிசனத்துக்கு கிட்டவில்லை. 1984   இல்  தமிழ்நாட்டுக்கு  இராமேஸ்வரம்  வழியாக சென்றவேளையிலும்    மன்னார்,  தலைமன்னார்  ரயில் நிலையங்களைத்தான்    கடந்திருக்கின்றேனே   தவிர  அந்தப் பிரதேசங்களுக்குள்   சென்று  உலாத்திவிட்டு  வருவதற்கு சந்தர்ப்பமே    கிடைக்கவில்லை. எனினும்  –  குறிப்பிட்ட  தமிழ்ப்பிரதேசங்களை   பார்க்கத்தவறிய   ஏக்கம் மனதில்   நீண்டகாலம்  இருந்தது.    அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து  2009   இல்  போர்  முடிவுக்கு  வந்தபின்னரே 2010  இற்குப்பின்னர்    மேற்சொன்ன  தமிழ்  ஊர்களுக்கும் கிராமங்களுக்கும்    பயணித்துவருவதற்கான  வாய்ப்பு  கிட்டியது.

Continue Reading →

சிறுகதை: வழுக்குப்பாறை(1925)

- யாஸுனாரி காவாபாட்டா -லதா ராமகிருஷ்ணன்தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.

ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத்தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ளரித்துண்டத்தைப் போலிருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும்போது பெண் குலத்தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்கவேண்டும் நான்).

“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்கவேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்களைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.”

Continue Reading →