சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி – 2015; பரிசு மொத்தம் 2 இலட்சம் இலங்கை ரூபா!

சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி - 2015;  பரிசு மொத்தம் 2 இலட்சம் இலங்கை ரூபா!பாரிஸ் மாநகரிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒலி வானொலி நடாத்தும் தோழர் சபாரத்தினம்  சுரேந்திரன் ஞாபகார்த்தச் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி – 2015

வானொலி, தொலைக்காட்சி, இலக்கியம் எனப் பெரிதும் பங்காற்றிய, காலஞ்சென்ற தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் நினைவாக   ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒலி வானொலி இவ்வருடம் சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டியினை நடாத்த முன்வந்துள்ளது. இப்போட்டியில் பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும் கதைகளுக்கு மொத்தமாக இரண்டு இலட்சம் (200000) இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது. முதலாவது பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படும் கதைக்கு ஒரு இலட்சம் (100000) ரூபா வழங்கப்படவுள்ளது. சிறுகதைப் போட்டிக்கென வந்துசேரும் கதைகளில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மூன்று கதைகள் வீதம் முதலில் தெரிவுசெய்யப்பட்டுப் பின்னர் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட கதைகளிலிருந்து பரிசுக்குரிய முதல் மூன்று கதைகள் தெரிவுசெய்யப்படும். அடுத்து ஆறுதல் பரிசுக்குரிய ஐந்து கதைகள் தெரிவுசெய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும் கதைகள் நூலாகத் தொகுக்கப்படும்போது மேலும் அடுத்த தரத்திலுள்ள சில கதைகளும் நூலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Continue Reading →

பொங்கல் / புத்தாண்டுக் கவிதைகள்!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 – வ.ந.கிரிதரன் –

greeting_pongal5.jpg - 13.10 Kb கதிரும், உழவும் இன்றேல் இங்கு
 உயிரின் இருப்பும் இல்லை அதனால்
 நன்றி மறப்பது நன்று அன்று
 என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
 கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
 உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
 உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
 இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
 இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
 கதிரும் உழவும் எருதும் எண்ணி
 அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
 இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
 வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
 ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
 அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
 இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
 களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்
  

Continue Reading →