பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

- வெங்கட் சாமிநாதன் -

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு  கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.

கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.

Continue Reading →

ஆய்வாளர் நலன் கருதி இணைய ஆய்விதழ்!

மதிப்பிற்குரியீர்,  வணக்கம்.  யாங்கள் ஆய்வாளர் நலன் கருதி இனம் எனும் இணைய ஆய்விதழைத் தொடங்கியுள்ளோம். தங்களுடைய ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இவ்வாய்விதழை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி! ஆய்விதழை…

Continue Reading →

ஜி. நாகராஜனின் நாவல்கள்

ஜி.நாகராஜன்இலக்கியம் என்பதென்ன? எழுதுவதெல்லாம் இலக்கியமா? எப்படி இலக்கியத்தை தரப்படுத்தலாம்? . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே…? இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

ஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.

பொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.

Continue Reading →

சிறுகதை– ”கண்ணி நுண் சிறுத்தாம்பு”

kamaladevi599.jpg - 16.73 Kbதிடீரென்று மருத்துவர் சுவா அவளை அழைத்தது ஆச்சரியமாக இருந்தது . வெளியிலென்றால் அவரது அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருக்கவேண்டும். ஆனால் இன்று அவர் வரும் நாள் என்றறிந்தும் இவள்  அலட்டிக் கொள்ளாமலிருந்ததற்குக் காரணமிருந்தது.  . இப்பொழுது புறப்பட்டால் தான் சுலமானைப் போய் பார்த்து சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு, இவள் ஜோகூர் சுங்கச்சாவடிக்கு போய், அங்கிருந்து சிங்கப்பூருக்குப் போக சரியாக இருக்கும்.

மருத்துவர் சுவா இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தரவில்லை. இது மருத்துவமனை அல்ல. காப்பகம் தான். என்றாலும்   இந்த வியாதிக்கு சட்டென்று ஒரு முடிவுக்கும் வர இயலாததற்கான காரணத்தை மருத்துவர் இவளுக்கு விளக்கியாயிற்று.அதற்கு இம்மியும் மாற்றுக் குறையாது சுமித்ரா, தன்னுடைய கருத்தின் நியாயம் பற்றி,  அதைவிட எதிர்பார்ப்போடு  விளக்கினாள்

“ சோ, திருமணம் இன்னும் ஒரு வாரத்திலா?  “ .மருத்துவரின் புன்னகை ஏனோ இவளுக்கு ரசிக்கவில்லை. ..கடந்த பத்தாண்டுகளாக   இந்த காப்பகத்துக்கு வரும் இவளுக்கும் மருத்துவர் சுவாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியில்லை.

Continue Reading →