சிறுகதை: ’பாரதி’யைப் பார்க்கவேண்டும் போல்…..

‘அநாமிகா’”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”

_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும்,  விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும்  ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள் (10)

- பிச்சினிக்காடு இளங்கோ காற்று மாறியடிக்கும்போது
விழுமிய வேர்களை
விட்டுவிடாதே கிராமமே

திறந்த வெளியில்
ஆடைமாற்றும் போதும்
மானம் விட்டுவிடாத
மறத்தி மாதிரி இரு       -வைரமுத்து –   
        
படிப்பைப்பற்றிக்கவலைப்படாமல் உடல் வளத்தைமட்டுமே கவலைப்பட்ட ஒரு சமுதாயச்சூழலில் படித்தது, படிப்புக்குக் கவனம் செலுத்தியது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. ஐந்து வகுப்பை பிச்சினிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடித்து, ஆறாவது வகுப்பில் பட்டுக்கோட்டை அரசு கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.உறவினர் வீட்டில் தங்கிப்படிக்கவேண்டும். கண்டியன்தெருவில்தான் மறைந்த மாமா வாசிலிங்கம் பட்டுமாமி வீட்டில் தங்கிப்படித்தேன். பின்பு மயில்பாலையத்தில் தாத்தா செவிட்டு ரெத்தினம் அவர்கள் வீட்டில் தங்கிப்படித்தேன். இந்தக்காலங்களில் என்னைக் கல்வியில் நானேதான் ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியின் எந்தப்போட்டியிலும் (விளையாட்டைத்தவிர)கலந்துகொள்ளும் மாணவனாக நானில்லை. அதிக மதிப்பெண் வாங்குகிற மாணவனாக நான் தென்படவில்லை. ஆனால் படிப்புக்காக அதிகம் கவலைப்படுகிற மாணவனாக நான் இருந்தேன். அதுதான் இன்றுவரை என்னைக்காப்பாற்றி வந்திருக்கிறது. ஏழாவது வகுப்பில் படிக்கும்போது விளையாட்டுப்போட்டியில் இரண்டு பரிசுகள் வாங்கினேன். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் எஸ்.D. சோமசுந்தரம் அவர்கள் பரிசுகள் வழங்கினார் . அவர் முன்னிலையில் சென்னை ராஜாஜி ஹாலில் உவமைக்கவிஞர் சுரதாவின்  மணிவிழாவில் கலந்துகொண்டு கவிதை பாடியதும், பிச்சினிக்காட்டிலேயே அவரைக்  கவிதையில் வரவேற்றதும் காலமும் நானும் கைகோத்து வந்ததன் பதிவு.

Continue Reading →

ஜூன் 2015 கவிதைகள்: மேலும் சில…

கவிதை வாசிப்போம் வாருங்கள்!க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!

இயற்கையின் வெற்றி

விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!

பொருளாதாரச் சிந்தனை

கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!

Continue Reading →

வாசகர் கடிதங்கள் சில.

வாசகர் கடிதங்கள் சில.Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com> wrote:
Subject: RE: நஸ்ரியா
Date: Sunday, June 21, 2015, 10:37 AM

நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.

நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?

தமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்

Continue Reading →