சிறுகதை: இருட்டடி

சிறுகதை: இருட்டடி

குமரனோடு படித்து,எ.லெவல் படிக்க வேறு பள்ளிக்கூடம் சென்று விட்ட செல்வனின் அக்கா, பஸ்ஸிற்கு நிற்கின்ற போது, மீன் சந்தைக்கு அம்மாவோடு போகின்ற போது,தெய்வம் கொழுப்பு மெத்திப் போச்சுது போல மோட்டர் சைக்கிள்ளை அவளுக்கு கிட்டவாக விட்டு எதையாவது சொல்லி தனகுகிறான். இதை கொஞ்ச நாளாய்க் குமரன் கவனித்துக் கொண்டே வருகிறான்.

தெய்வம்,ஒரு பிரபலமான சண்டியனின் தொகை வாரிசுகளில் ஒருத்தன்.ஏற்கனவே திருமணமாகி ஆசைக்கு என்றும் ,ஆஸ்திக்கு என்றும் பிள்ளைகள் இருக்கிற போதிலும், பக்கத்துக் கிராமத்திலிருந்து இன்னொருத்தி மேலும்  , காதல் வயப்பட்டு ,கிளப்பிக் கொண்டு வந்து மல்லிகை கிராமத்தின் ஒருவனாக வாழ்கிறவன். அவளும் காதல் வயப்பட்டு அவனோடு வந்வள் தான். இவன் ஒன்றும் பெரிய ரவுடி கிடையாது.சகோதரர் மத்தியிலே இவன் ஒருத்தன் தான் ஒ.லெவல் வரைக்கும் படித்தவன் கூட.அப்பன் வட்டிக்கு  காசு கொடுக்கிறவன்,வாகனம் பழக்குகிறவன் ..என பல தொழில்களை வைத்திருக்கிறவன்.அதில் ஒன்றிலே இவனும் வேலை பார்க்க காலையிலே மோட்டர் சைக்கிளிலில் நகரத்திற்குப் போய் விடுவான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 94: நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை.

வ.ந.கிரிதரனின் நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை!காலம் கைகூடின் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள இந்த நாவலின் இரு பகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 1983இல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத்தொடர்ந்து , இலங்கையில் அரச திணைக்களமொன்றில் உயர் பதவியிலிருந்த இளங்கோ அகதியாகக் கனடா நோக்கி புலம்பெயர்கின்றார். இடையில் அவரது பயணம் அமெரிக்காவின் பாஸ்டனில் தடைப்படுகின்றது. அங்கிருந்து அவரை கனடாவுக்கு ஏற்றிச்செல்லவேண்டிய டெல்டா நிறுவனம் மறுத்து விடவே அங்கு அரசியல் அடைக்கலம் கோருகின்றார். இவ்விதம் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அவர் நியூயார்க் நகரிலுள்ள புரூக்லீன் தடுப்புமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றார்.

அவரது புரூக்லீன் நகரத்துத்தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் முதல் பகுதியான ‘அமெரிக்கா’ ‘டொராண்டோ’விலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியாகிப் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட இளங்கோ மேலும் ஒருவருட காலம் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிமகனாக, எந்தவிதக்குடிவரவு ஆவணங்களுமின்றி தன் இருப்புக்காகப் போராடுவதை விபரிக்கும் பகுதியே ‘குடிவரவாளன்’. இருபத்தேழு அத்தியாயங்களை உள்ளடக்கிய இப்பகுதி திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இப்பகுதி எதிர்காலத்தில் நூலுருப்பெறவுள்ளது.

Continue Reading →