பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!

மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்…

வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்

கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு

ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்…

ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்…

நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்

மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்

சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.

கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்

ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை…

ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே

காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்…

வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.

காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்…

நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்

போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என…

ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.

Continue Reading →