சொப்கா மன்றத்தின் கனடாத்தின விழா – 2015

dsc_0319.jpg - 27.50 Kbபுலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாத்தினம் கொண்டாடப்பட்டது.

கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, மன்றக் கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி செந்தில்மோகன் அவர்களால் கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டது. மன்றத்தின் தற்போதைய தலைவரும் சட்டத்தரணியுமான வாணி செந்தூரன் அவர்களால் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினராக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் வைத்திய கலாநிதியுமான செந்தில்மோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அரங்கம் நிறைந்த கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த மேடையில் சொப்கா தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.

Continue Reading →