பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். ) கவிதைகளிரண்டு!

1. புல்.

vetha_new_7.jpg - 11.42 Kbபுல்லில் படுத்து வானம் பார்
அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை
சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.
புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.
பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.
புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.
உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.
புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.
அகரம் புல், அருகன் புல்லாகிய
அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.
ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.
காகா மூலி, ஆரோக்கியப் புல்,
குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,
விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

Continue Reading →

சிறுகதை: வைகறைக்கனவு

1_thamilinijayakumaran5.jpg - 6.60 Kb‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.

ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.

“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”

“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”

“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக்குலுங்கியது.

Continue Reading →