ரிஷி கவிதைகள்!

1. வெந்து தணியும் காடு….

- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் ) -துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

Continue Reading →

படச்சுருள் மாத இதழ் நடத்தும் “அரசியல் சினிமா” தொடர் திரையிடல் நிகழ்வு…

படச்சுருள் மாத இதழ் நடத்தும் "அரசியல் சினிமா" தொடர் திரையிடல் நிகழ்வு...02-07-2015, வியாழன், இரவு 7.00 மணிக்கு, | ஸ்பேசஸ் அரங்கு, பெசன்ட் நகர், தலபாக்கட்டி உணவகம் அருகில்.

திரையிடப்படும் படம்: Father Son & Holy War (Directed by: Anand Patwardhan)

நண்பர்களே, மும்பை பிரித்வி அரங்கில் ஆனந்த் பட்வர்தன் தொடர்ச்சியாக அரசியல் பேசும் ஆவணப்படங்களை திரையிட்டு வருகிறார். நாம் தலைகீழாக புரண்டாலும் அத்தகைய படங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. தவிர அரசியல் படங்களை திரையிட்டு விவாதிப்பது என்பது ஒரு கலாச்சாரத் தேவை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான படங்களை தொடர்ந்து திரையிட தமிழ் ஸ்டுடியோ சார்பாக முன்னமே முயற்சித்து இடம் கிடைக்காமல் தவித்து வந்தேன். ஆர்.கே.வி ஸ்டுடியோ மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் கேட்கும் வாடகை 3௦ ஆயிரம். மாத திரையிடலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சென்ற வாரம் ஆனந்த் பட்வர்தன் சென்னை வந்திருந்தபோது, இது பற்றி விவாதித்தேன். அருகில் இருந்த சதானந்த மேனனிடம் ஸ்பேசஸ் இடத்தை அத்தகைய அரசியல் திரைப்படங்களை திரையிட கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் வார இறுதி நாட்களில் அதாவது விடுமுறை நாட்களில் கொடுக்க இயலாது, வியாழன் மட்டுமே அரங்கு கிடைக்கும் என்றார். அருகில் இருந்த ஆனந்த் பட்வர்தன் அரங்கு கிடைக்க வேண்டும் அதுதான் முக்கியம். முதலில் ஒப்புக்கொள்ளுங்கள், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போகலாம். போக போக வந்துவிடுவார்கள் என்றார். சரி என்றேன்.

Continue Reading →