வாசிப்பும், யோசிப்பும் 170 : யாழ் இந்துக்கல்லூரி வருடாந்த இராப்போசன இரவினில்….

– வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. –

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

நேற்று நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரின் வருடாந்த இராப்போசன இரவு  ‘ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்ட’ரில் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளைத்தவிர்ப்பவன் நான். ஆனால் இம்முறை நண்பர்கள் பிறேமச்சந்திரா, கனகவரதா ஆகியோர் கூடுதலாக யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தில் இணைந்து செயற்பட்டதாலும், நண்பர் கீதானந்தசிவமும் செல்வதற்கு ஆவலுடன் இருந்ததாலும் செல்வதற்கு முடிவெடுத்தேன்.

பாடசாலைக்காலத்து நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம், எமக்குக்கற்பித்த ஆசிரியர்கள் பலரைச்சந்திக்கலாம் என்பதாலும் செல்வது நல்லதே என்று தோன்றியது.

கூடவே நண்பர் கனகவரதாவின் பரிந்துரையின் பேரில் ஈழத்துத்தமிழ்த்துள்ளிசைப்பாடகரான அமுதன் அண்ணாமலையின் இசைக்கச்சேரியும் நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், அவரது பாடல்களையும் நேரில் மீண்டுமொருமுறை கேட்டு மகிழலாம் என்ற எண்ணமும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டியது.

கனடாத்தேசிய கீதம், கல்லூரிக்கீதம் மற்று, தமிழ்த்தாய் வணக்கம் ஆகியவற்றை முறையே செல்வி வைசாலி கிருஷ்ணானந்தன், கலாநிதி மைதிலி தயாநிதி மற்றும் சிவை சுபதரன் ஆகியோர் பாடி நிகழ்வினைத்தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மைப்பலிகொடுத்த போராளிகள் அனைவருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புரையினை திரு. ரவீந்திரா கந்தசாமி நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடன நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து சங்கத்தலைவர் திரு. மோகன் சுந்தரமோகனின் தலைமையுரையும், அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.பிரபா சந்திரனின் உரை நிகழ்ந்தது.  இவர் அமெரிக்க மத்திய அரசின் பாதுகாப்புத்திணைக்களத்தில் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →