அகப்பாடல்களில் பறவை – மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)

- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -சங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.

1. குருகு
நற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.   

தலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,

“கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி@
பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@
அது நீ அறியின், அன்புமார் உடையை@
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை
இற்றாங்கு உணர உரைமதி”  (நற்றிணை: 54)

Continue Reading →