எதிர்வினை: இனப்படுகொலையா? இனக்கொலையா?

வாசகர் கடிதங்கள் சில.Siva Ananthan <atpu555@yahoo.co.uk> Today at 9:59 AM

அன்புள்ள கிரிதரன், உங்கள் பதிலுக்கு நன்றி. எனது மடலில் என் எண்ண ஓட்டத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். கலவரம் என்ற சொல்லுள் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம், சமூகக் கலவரம், இனக்கலவரம் இப்படிப் பல்வேறு வகைகள் அடக்கம். இனக்கலவரம் என்ற சொல்லுள் இருசமூகத்தவர் ஒருவரையொருவர் தாக்குதலும் (உ+ம்: சிலவருடங்களுக்குமுன் பாக்கிஸ்தானியரும் இந்தியரும் இங்கிலாந்தில் சண்டையிட்டுக்கொண்டனர்),ஒரு சமூகத்தவரை இன்னொரு சமூகத்தவர் தாக்குதலும் ஆகிய இரு வகைகளும் அடக்கம். எமக்கு நடந்தது இரண்டாவது வகையானது என்பது தெளிவு. அதிலும் ‘கலவரம்’ என்ற சொல் அதன் கொடூரத்தை, 1000 க்கு மேற்ற்பட்ட கொலைகளைப் புலப்படுத்தவில்லை.

எனது ஆதங்கம் என்னவெனில், எவ்வாறு கலவரம் என்ற சொல் எமக்கு நடந்த அவலத்தைக் குறிக்கப் போதாத வார்த்தையோ, அதுபோலவே ‘இனக்கலவரம்’ என்ற சொல்லும் போதாது என்பதே. தவறானது அல்ல. போதாது. ஏனெனில், அச்சொல், இன்னொரு கருத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படக்கூடியது. அதாவது – இரு சமூகங்கள் ஒருவரையொருவர் தாக்குதல். அதனால், ‘தமிழினப் படுகொலை’ அல்லது ‘தமிழர் படுகொலை’ என்பது போன்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது என்ன நடந்தது என்பது விள்ங்கப்படுத்தத் தேவையில்லாமல் புரிகின்றது.  குறிப்பாக, இது பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கு. அ-து, இது சிங்களவ்ர்களுக்கும் தமிழருக்கும் இடையே நடந்த ‘க்லவரம்’ அல்ல. சிங்களக் காடையகர்களால் தமிழர்கள் கொலையும் கொள்ளையும் செய்யப்பட்ட நிகழ்வு.

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்: சிறுகதை – நாவல் பயிற்சிப்பட்டறை – July 2018

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில்   90 Littles…

Continue Reading →

சந்திப்பு – 40

தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்சிறப்புரை  ஆர் வெங்கடேஷ் (பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்)இடம் :      கிளை நூலகம்,  தேதி                           26.07.20187 இராகவன் காலனி…

Continue Reading →

‘இனப்படுகொலையா? இனக்கலவரமா?’

வாசகர் கடிதங்கள் சில.From: Siva Ananthan <atpu555@yahoo.co.uk>
To: “ngiri2704@rogers.com” <ngiri2704@rogers.com>
Sent: Tuesday, July 24, 2018 2:14 PM
Subject: 83 ‘ஜூலை’ இலங்கை இனக்கலவர நினைவுகள்…..

ஐயா, தங்களுடைய மேற்படி கட்டுரை வாசித்தேன். அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு அங்கே இடமில்லை. காரணம் என்ன?
ஆயினும் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
1983 இல் நடந்தது இனக்கலவரம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அது தவறென்பது என் கருத்து. கலவரம் அல்லது Riot என்றால் இரு பகுதியினர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது. 83 இல் நடந்தது தமிழரைச் சிங்களக் காடையர் கொலை செய்து கொள்ளையடித்தமை. அது இனக்கலவரம் அல்ல. இனப் படுகொலை அல்லது தமிழரின் படுகொலை. அதை அவ்வாறு கூற நாமே ஏன் தயங்குகின்றோம் என்று புரியவில்லை.
நன்றி.
அன்புடன்,
ஆனந்தன்.


வணக்கம் ஆனந்தன்,கலவரம் என்பது சமூகச்சீர்குலைவு அல்லது சீரழிவு. இதனை ஒரு குழு வன்முறையின் மூலம் அதிகாரிகளுக்கு எதிராக, உடமைகளுக்கு எதிராக மற்றும் மக்களுக்கு எதிராகப் புரியும் சீரழிவுச் செயல் என்றும் கூறலாம். 1983, 1977 மற்றும் 1958 போன்ற ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனத்துவேசிகளால் புரியப்பட்ட படுகொலைகள், உடமை அழிப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் எவ்விதம் அழைப்பது?

சிங்களக் காடையர்களின் குழுக்கள் மூலம் தமிழ் மக்கள் மீதும், அவர்கள்தம் உடமைகள் மீதும் புரியப்பட்ட வன்முறை. இதனை இனவன்முறை , இனக்கலவரம் என்று அழைப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இனக்கலவரம் என்பது பொதுவான சொல். இனக்கலவரத்தின் இன்னுமோர் வடிவமே இனப்படுகொலை (Genocide)  . இனக்கலவரம் என்னும்போது சம்பந்தப்பட்ட இனங்கள் ஒருவருடன் ஒருவர் மோதினால் மட்டுமே இனக்கலவரம் என்பதில்லை. ஓரினக் குழு இன்னுமொரு குழுவின் மீது வன்முறையினைப் பாவித்து அழிவு நடவடிக்கைகளைச் செய்தாலும் அதுவும் இனக்கலவரமே.

Continue Reading →