கவிதை: கடவுள்!

- முல்லைஅமுதன்

பொழுதே போகாமல்
உட்கார்ந்திருந்தார் கடவுள்.
பக்தர்களே வரவில்லை..
திருந்திவிட்டார்களா?
அல்லது அவர்களே சாமியாகிவிட்டார்களா?
தலையைப் பிய்த்துக்கொண்டார் கடவுள்.

Continue Reading →

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.பூனையைப் புறம்பேசல்

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு 
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும் 
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே 
பூனையும் நாமாகவியலாது.
இதில் 
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.

Continue Reading →

ஆய்வு: தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள்

- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -“மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தோடு இலக்கியக் கோட்பாடுகள் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கையோடு போராடி, இயற்கையை அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறும் போது, இயற்கையின் மத்தியில் இயற்கையை விடவும் உயர்வு பெற்ற மனிதன் காட்சி தருகிறான். இயற்கையோடு போராடி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை எந்த அளவிற்குத் தன்னைச் சுற்றியுள்ள புறச்சூழல்களையும் மனிதன்; கட்டுபடுத்தி ஆளத் தொடங்கி விடுகிறான். இதனால், உழைக்கும் திறத்தோடும் உற்பத்திப் பெருக்கதோடும் பொருளாதார வளர்ச்சியோடும் பண்பாட்டு நிலைகள் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம்”1 என்பார் ஜி.ஜான்சாமுவேல். இதனைச் சமுதாய இருப்பு என்பர் மார்க்சியவாதிகள்.

சமுதாய இருப்பு குறித்து தி.சு.நடராஜன் கூறும் பொழுது, “சமுதாய அமைப்பினைத் தமக்குள் செயல்பாட்டுறவுடைய இரண்டு கட்டுமானங்களாக மார்க்சியம் பகுத்துணர்கிறது. இவ்விரண்டு கட்டுமானங்களுள், அடிக்கட்டுமானம் என்பது பொருளியல் வாழ்க்கையின் அனுகூலங்களால் பெற்ற பொருளாதார உற்பத்தியுறவுகளைக் குறிக்கும். இது சமுதாய இருப்பு என்பதாகும். இத்தகைய வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் மட்டத்தில் அமைந்துள்ள கருத்தோட்டங்கள், சமயங்கள், அரசுகள், மரபுகள், அழகியல்கள் முதலியவற்றின் ஒட்டு மொத்தத்தைக் குறிப்பிடுவது, “சமுதாய உணர்வு நிலை” என்பதாகும். இதுவே சமுதாய அமைப்பின் மேல் கட்டுமானம் இது, தனக்குள் ஒன்றைனையொன்று சார்ந்துள்ள பல உள்கட்டுமானங்களைக் கொண்டி ருக்கிறது.”2 என்பார்.

மேற்கண்ட கூற்றுகள் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைத் திறன்களை விளக்குவதாகவுள்ளன. இலக்கியத்தின் மேல்கட்டுமானங்களை விட, அவற்றின் கருத்திற்கே முக்கியத்துவம் மார்க்சியத்தில் வழங்கப் பெறுகின்றன.

தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. அவைகள் சமூகப் பொருளதார ஏற்றத் தாழ்வுகளைக் கூறுவதாகவும், ஏழ்மை நிலையினைச் சுட்டிக் காட்டுவதாகவும், அரசியல்வாதிகளின் போலித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

சிற்றிதழ்க் கவிதைகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள்
“இலக்கியம் என்பது காலங்காலமாகக் கலாச்சாரத்தின் வாழ்க்கை முறையின், வாழ்நிலைகளின் சமூக எதிர்பார்ப்புகளின், கட்டுகளின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது”3 என்பார் சாப்ராபேகம். “இலக்கியம் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி, சமுதாயத்தின் நலன்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டே இருக்கும்”4 என்பதைக் கொண்டு இலக்கியத்தில் சமூகம் ஒன்றியிருக்கும் தன்மையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் பெற்ற கவிஞன் தன் ஆற்றொணாத் துயரத்தைத் தம் கவிதையில் பதிவு செய்கின்றான். அவ்வாறான கவிதையாக,

“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது.
கனமாய் விழும்
எங்கள் எழுத்துக்கள்
உங்கள் பாறை
மனசுகளை
உடைத்துப் போடும்
கவனமாயிருங்கள்”5

எனும் இக்கவிதையைக் கூறலாம். எழுத்தினாலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டி, முயற்சிகள் செய்கின்றோம். கவனமாயிருங்கள் எனக் கவிஞரின் எச்சரிக்கை அமைகின்றது. “ஒரு மனிதன் எந்த அளவிற்கு வாழ்க்கையோடும் புற உலகோடும் வரலாற்றின் முற்போக்குச் சக்திகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு அவனது முருகியல் உணர்வுகளும் வளம் பெற்றதாகக் காட்சி தரும். இந்நிலையில் நின்று நோக்குவோமென்றால் கலை என்பது புற உலகின் பிரதிப்பலிப்பாக அமைவதைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.”143 பா.தனராஜ் தம் கவிதையொன்றில், சமூக ஏற்றத்தாழ்வைக் ‘காப்பிழை’ என்கின்றார். ஏழை பணக்காரன் நிலை குறித்துக் கூறும் பொழுது,

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 5 : எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல. ‘புதிய திசைகள்’ பாலன் உடன் ஓர் உரையாடல்

புதிய திசைகள் பாலன்மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின்  பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.

•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை.
•போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும்.
•சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற்காக எமது உரிமைகளை விற்க முடியாது.
•தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல்.
•வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.

மேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.

முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.

Continue Reading →

JEEVANATHI focusses on quality writing

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

Lankan contemporary Thamil Literature has it own individual identity different from what is produced elsewhere. Certainly, it is not an adjunct in the overall Thamil Literature produced in Thamilaham or Thamilnadu. The literary journals locally published are standing evidence for its authenticity. It all began in the mini cultural revolution in late 1950s and reached its peak in the 1970s. The process continues without any need to establish the fact. The late academics like K Kailasapathi, K Sivathamby,  and HMP Mohideen were in the forefront in formulating this perception. The pattern of indigenous culture ad living had their own individuality although common practices in India and Lanka were there.

There were many literary magazines that are now defunct due to financial difficulties, especially Mallikai edited by indefatigable Dominc Jeeva in his 90s now, but yet some creative writing and critical articles were included in these journals.

Currently, there are monthly, quarterly, and periodically published journals are in circulation coming from various parts in the island- Colombo, Yaalpaanam, Maddakkalappu, Kalmunai, Anuadhapura, and other places. To mention the names of some of the literary journals, we have Gnanam, Jeevanathi, Makudam, Padigal, Kalai Mugam, Kalaik Kesari, Poongavanam, Thayaka Oli, Maruka and others to read what the Lankan Thamil-speaking writers are saying in their writing.

Apart from these journals, the Sunday editions of Thinakkural, Thinakaran VaaraManjari and Sudar Oli and Virakeari carry lot of literary materials for the discerning reader.

Jeevanathi in its June & July, 2018 issues published almost research-like articles and creative writing that are of high quality. This journal is edited by young Psychology majored graduate from the University of Jaffna (Yaalpaanam). Taking the articles only for consideration the following among many are Illuminating:

01.The role of the cremators in fiction – Ee.Su. Muralitharan
02.The Change in Form in Literature and Politics – Dr N Ravindren
03.Little Magazines- Sellathurai Sutharsan
04.Not Unnamed Stars but Shooting Stars-N. Navaraj
05. Mu.Tha and his short stories-K Saddanathan
06 Simon Cassie Chetty’s Contributions towards research in Thamil in Lanka- Susman

Continue Reading →