ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

- லதா ராமகிருஷ்ணன் -– இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. –

ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE MALICE OF THE FACELESS

Holding which end of the life that is not
she would walk on the rope-ladder
_ with a malicious smile you kept looking on

The length of the short span between life and death
had swelled into a river sideways
whenever she tried to cross it
the night’s dream ends

life’s thirst doesn’t suffice
to drink death
the length of her dream’s wing
you cannot measure

When the jungle of Yakshi beyond imagination
smouldering gradually and turning into
raging fire
amidst the shimmer of ashes she sprouts softly.

முகமிலியின் வன்மம்

இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு அந்த நூலேணியில் அவள் நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்

இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பெருக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவு தீர்ந்துபோய் விடுகிறது.

Continue Reading →

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)- லதா ராமகிருஷ்ணன் -சமீபத்தில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள காலிபின் 440 கவிதைகளின் (பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதைகளின்) ஆங்கில மற்றும் தமிழ் ஆகிய இருமொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இந்த நூலில் [ஆங்கில மொழிபெயர்ப்பு திரு. மூஸா ராஜா ; தமிழில்: நான்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முழுமுனைப்பான உதவியுடன்] இடம்பெறும் என்னுடைய சுருக்கமான ‘சொல்லவேண்டிய சில’ என்ற தலைப்பிலான கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. ]

நாம் 200 சதவிகிதம் அன்பைத் தந்தும் நமக்கு 20 சதவிகிதம் அன்புகூட சம்பந்தப்பட்ட மறுமுனையிலிருந்து பதிலுக்குக் கிடைப்பதில்லை என்பதாக மனிதமனங்கள் உணரும் தருணங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீரும். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில், நண்பர்களுக்கு இடையில், சகோதர சகோதரிகளுக்கு இடையில், தலைவர் – தொண்டருக்கும் இடையில் சு எல்லாவற்றிற்கும் மேலாக, அன்புவயப்பட்டிருப் பவருக்கும் அவருடைய அன்புக்குப் பாத்திரமான வருக்கும் இடையில். இந்தப் புறக்கணிப்பு ஏற்படுத்தும் வலியின் தாக்கம் அன்றும் இன்றும் பல அரிய படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. பாராமுகத்தின் தீரா வலியை பேசிப்பேசி நிவாரணம் தேடிக்கொள்ளும் பிரயத்தனமாய்…

தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லையென்றால் அதற்காய் அவர் மீது அமிலம் கொட்டுவதா உண்மைக்காதல்? ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனதார வாழ்த்துவதே மெய்யன்பு. இது ஏமாளித்தனம் என்று எண்ணுவோர் உண்டு. அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவருவதுபோல் தோன்றுகிறது, ஆனால், உண்மையான அன்பு – அது ஒருதலைக் காதலோ, இருதலைக் காதலோ, பொருந்தாக் காதலோ, பொருந்தும் காதலோ -ு ஒருவரை ஏமாளியாக்கி னாலும் பரவாயில்லை; எக்குத்தப்பான கிராதகராக்கி விடலாகாது.

’மிர்ஸா காலிப்’-இன் கவிதைகளில் மேற்காணும் மெய்யன்பும், அதற்குப் பிரதிபலனாகக் கிடைக்கும் வலியும் மிக நுட்பமாக விரித்துவைக்கப்பட்டி ருக்கின்றன. காதலினூடாக இந்தக் கவிதைகள் வாழ்க்கையின் பல கூறுகளை, சமூகத்தை, மதத்தைப் பற்றியெல்லா காலத்திற்குமான, கேட்கப்படவேண்டிய கேள்விகளை எழுப்புகின்றன. மிர்ஸா காலிப்-இன் கவிதைகளுடைய தத்துவார்த்தப் பின்னணி, இறையியல் சார்ந்த கோணங்களை யெல்லாம் மிர்ஸாவின் பாரசீகக் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து நேரடியாக உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் THE SMILE ON SORROW’S LIPS என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ள திரு.மூஸா ராஜாவின் முன்னுரை (இந்த நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது) விரிவாகப் பேசுகிறது.

Continue Reading →