எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார்!

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்'பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'நவீனத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவரான எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுச்செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். அண்மைக்காலமாக இவரது உடல்நிலை பற்றிய செய்திகளை முகநூல் மூலம் அறிந்து வந்திருக்கின்றேன். இவரது ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்கள் தமிழில் வெளியான சிறந்த படைப்புகள். ‘வானம் வசப்படும்’ நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதை, கட்டுரை, நாவல், நாடகமெனத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தமிழ் எழுத்தாளர்களின் புனைபெயர்களில் என்னை மிகவும் கவர்ந்த புனைபெயர்களில் ஒன்று இவரது புனைபெயரான ‘பிரபஞ்சன்’ என்னும் புனைபெயர்.

சென்னை மாநகரில் கழிந்த இவரது ‘மேன்சன்’ வாழ்க்கை பற்றிய கட்டுரைகளும் முக்கியமானவை.

இவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்பது மிகையான கூற்றல்ல.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்கலைஞ்சியமான விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

Continue Reading →