வாசிப்பும், யோசிப்பும் 319: என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு – டால்ஸ்டாய்
2. Crime and Punishment – Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov – Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை – மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் – மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis – Franz Kafka
8. The old man and the Sea – Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் – அ.ந.கந்தசாமி
10. Candide – Voltaire
11. காலம் – வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! – ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos – Brian Greene
14. A brief History Of Time – Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் – தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா – டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை – எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. – அதீன் பந்த்யோபாத்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்! காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் ‘தங்ஙள் அமீர்’! மகாகவியின் மகாமனது!

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் ‘ஜெயித்த கதை’ கட்டுரையின் இறுதியில் ‘என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப்பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.


காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் ‘தங்ஙள் அமீர்’!

Continue Reading →