அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகளை நினைவு கூருகிறேன். மாகவி தான் வாழ்ந்த சமுதாயத்தை பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த நாட்டைப்பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த உலகைப்பற்றிச் சிந்தித்தான். இவ்வுலகை உள்ளடக்கிய இப்பிரபஞ்சத்தைப்பற்றிச் சிந்தித்தான். பிரபஞ்சப்பிரக்ஞையுடன் அவன் இம்மானுடர் பிரச்சினைகளை, துயரங்களை அணுகினான். அவ்விதம் அணுகியதால்தான் அவன் மொழி வெறியனாகவோ, மத வெறியனாகவோ எப்பொழுதும் இருந்ததில்லை. மிகவும் தெளிவாக அவனால் சகல பிரச்சினைகளையும் அணுக முடிந்தது; சிந்திக்க முடிந்தது. தமிழ்  மொழியின் தொன்மையினை, இலக்கியச் சிறப்பினை உணர்ந்திருந்த பாரதி அதனால்தான் தமிழ் மொழியின் சிறப்பினைப்பாடினான். அந்நியருக்கெதிரான இந்திய தேசிய விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவன் என்றுமே தேசிய வெறியனாக இருந்தானல்லன். இவ்விதமான தெளிவு காரணமாகத்தான் அவனால் மானுட விடுதலையைப்பற்றியும் மிகவும் தெளிவாகப்பாட முடிந்தது; எழுத முடிந்தது.

இந்நாளில் நாமுமொரு உறுதியெடுப்போம். நாம் நமது  மக்களின் உடனடிப்பிரச்சினையான சமுதாய, அரசியற் மற்றும் பொருளாதாரப்பிரச்சினைகளை அணுகும்போது பிரபஞ்சப்பிரக்ஞையுடன் எம் பிரச்சினைகள் அணுகுவோம். அவ்விதம் அணுகினால் நாம் மொழி வெறியர்களாகவோ, இன , மத வெறியர்களாகவோ இருக்க மாட்டோம். இம்மானுடரை, இம்மண்ணை, பிறந்த மண்ணை, இங்கு வாழும் சகல உயிரினங்களை, இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, இதற்கு இணையாக இருக்கும் சாத்தியம் மிக்க ஏனைய  பிரபஞ்சங்களைப் பற்றியெல்லாம் தெளிவுடன் இருப்போம். இருக்கும் பிரச்சினைகளையும் விரைவாக அணுகித் தீர்த்திட முயற்சி செய்வோம்.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழகத்தின் எல்லை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

Continue Reading →

கவிதை: எதுதான் தகுதி

 

ஶ்ரீராம் விக்னேஷ்

எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
‘எச்சிக்கலை’ பலரின்று  இருக்கின்றார் பதவிகண்டு….!

நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!

Continue Reading →

ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்துகின்றன. காதல், வீரம் என்ற இரு இலக்கியப் பாடுபொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் அக்கால மக்களின் பண்பாட்டுப் பதிவுகள் எண்ணத்தக்க ஒன்றாக விளங்குகின்றன. தண்டமிழ் மொழிக்கண் தோன்றிய சங்க மருவிய நூல்களில் எட்டுத்தொகையில், ஐந்தாவதாக ‘ஒங்கு பரிபாடல்’ என உயர்ந்தோரால் உயர்த்திக் கூறப்படுவது ‘பரிபாடல்’ என்னும் சிறப்புமிகு நூலாகும். 

சங்க நூல்களில் அகப்பொருள்-புறப்பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவும் விதத்தில் புலமைச்சான்றோரால் படைக்கப்பட்ட பெருமைமிகு நூலாகவும் இந்நூல் திகழ்கின்றது. திருமாலையும், முருகனையும், வையைப் பேரியாற்றையும் வாழ்த்துவதனை உட்பொருளாகக் கொண்டு தமிழகப் பண்பு, காதல், வீரம், பண்பாடு, அறம், பண்டைத்தமிழர் பின்பற்றிய சடங்குமுறைகள், அவர்கள் பின்பற்றி நடந்த நம்பிக்கைகள் முதலான கூறுகளை புனைநலத்துடன் எடுத்துரைக்கும் நூலாகவும் விளங்குகின்றது.

இத்தகு சிறப்புமிகு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை உ.வே.சாமிநாதையரைச் சாரும். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார் என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகு நூலின் வாயிலாகச் சங்கப் புலவர்கள் புலப்படுத்தும் கலையும் கலைநுட்பத்திறனும் குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

பரிபாடல் – பெயர்க்காரணம்
பல பாவகைகளையும் ஏற்று வருதலின் ‘பரிபாடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ‘பரி’ என்பதற்கு, ‘குதிரை’ என்று பொருள் கொண்டு. பரிபாடலின் ஒசை. குதிரை குதிப்பது போலவும். ஒடுவது போலவும் நடப்பது போலவும் இருத்தலின் ‘பரிபாடல்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். 

‘அன்பு’ என்னும் பொருள் படும் ‘பரிவு’ என்னும் சொல் இறுதி கெட்டுப் ‘பரிபாடல்’ என வந்ததெனக் கொண்டு, அப்பாடல் அகத்திணையைச் சுட்டுவது” எனக் காரணம் கூறுகின்றார் சோம. இளவரசு. “பரிபாட்டு என்பது இசைப்பா ஆதலான்” எனப் பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் அதன் இசை இயல்பை எடுத்துக்காட்டுவர். இசை தழுவிய உருட்டு வண்ணம் பரிபாடலுக்கு உரியது ஆகும்.

“இன்னியல் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்’ என்னும் பரிபாடலில் வரும் அடியும் அதன் இசைச் சிறப்பை உணர்த்தும். இவற்றை நோக்கும்போது “இசை பரிபாடல் என்பதே இசை என்னும் சொல் கெட்டுப் பரிபாடல் என வழங்கலாயிற்று’ என்று கருதலாம் என்பர் இரா. சாரங்கபாணியார். கலிப்பாவால் இயன்ற நூல் கலித்தொகை என்று பெயர் பெற்றது போலப் பரிபாடல் என்னும் ஒரு பாவகையான் இயன்ற நூலாதலின் இப்பெயர் பெற்றது என்று கொள்ளுதல் தகும்.

Continue Reading →

வாசகர் கடிதங்கள்!

வாசகர் கடிதங்கள்
Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>

Dec. 30 at 8:01 p.m.
திரு கிரிதரன் அவர்களுக்கு
பதிவுகள் ஆசிரியர்

அன்பு வணக்கம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக அமையட்டும். உங்களின்  படைப்புலகப் பணிகள் உன்னதம் அடைந்திடட்டும். நலமும் வளமும் பெருக குடும்பம் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென்று புதுவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.

வாழ்கவளமுடன்
அன்புடன்
ஜெயராமசர்மா

Continue Reading →

கவிதை: வல்லவொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே !

-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

புத்தாண்டே    நீ    வருக
புத்துணர்வை  நீ  தருக
நித்தமும்   நாம்   மகிழ்ந்திருக்க
நிம்மதியை  நீ   தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய்  நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம்  பொங்க  நீவருக

வாருங்கள்   என   அழைத்து
வரும்  மக்கள்  வரவேற்கும்
சீர்  நிறைந்த நாட்டிலிப்போ
சீர்  அழிந்து நிற்கிறது
யார்  வருவார்  சீர்திருத்த
எனும் நிலையே  இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை  திருத்தி  வைத்துவிடு

Continue Reading →