நான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி

பிரான்சில் முருகபூபதிஎமது தாயகம் ஈழத்தில் 1970 களில்  எழுத்துத்துறையில் சிறகு முளைத்து இலக்கிய வானில் இற்றைவரையில்  உயர உயர பறந்து கொண்டிருக்கும்இலக்கியப் பறவை முருகபூபதி  கங்காரு நாட்டின் சரணாலயத்திற்கு  1987 இல் புலம்பெயர்ந்தவர். கலை இலக்கியவாதிகள் நிரம்பிய  பாரிஸ் மாநகரம்  நோக்கி  இந்தப்பறவை சிறகு விரித்தது. தனது கல்வி கண்ணை திறந்த வட்டுக்கோட்டை  சித்தங்கேணிபண்டிதர் மயில்வாகனனாரின் நூற்றாண்டு நிகழ்வுக்காக பாரிஸ்  வந்த முருகபூபதியை மூன்று தருணங்கள்சந்தித்தேன் .  பல தடவைகள் தொலைபேசியில் பேசினேன். அவருடனான  சந்திப்புகளும்,உரையாடல்களும் சிந்திக்க வைத்தன.அவரது வாயிலிருந்து சிந்திய
வார்த்தைகள் அனைத்தும் எனது மனக்கணினியில் பதிந்துள்ளன.

1972 ஆம் ஆண்டு  வீரகேசரி நாளிதழ்  அவரது எழுத்து பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதலில் அவரது ஊர் நீர்கொழும்பின் பிரதேச நிருபராக தனது பணியை ஆரம்பித்தார். இன்று நான்கு தசாப்தங்களுக்கும்  மேலாக அவரது  எழுத்துப் பயணம் அகன்று விரிந்து தொடர்கிறது.இந்தப் பாதை நீளமானது,அகலமானது என்பதை புரிந்து கொண்டு,  முன்வைத்த காலை பின் வைக்காது தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

எங்கே சென்றாலும் எதனைப்பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு தீனிதான் !! தான் கற்றதையும் பெற்றதையும்  யதார்த்தம் குறையாமல், அற்புதமாக சுவையான ரசனையுடன்  வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வார். “பேப்பரையும் பேனாவையும் தவிர தனக்கு வேறு எதுவும் தெரியாது “என்றுதான்அவர் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபோது தெரிவித்தார்.   அவர் இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

வீரகேசரி வாரவெளியீட்டில்   “இலக்கியப்பலகணி “ என்ற மகுடத்தில் ரஸஞானி என்ற பெயரில்தான்அவரது எழுத்துக்களை முதலில் வாசித்தேன்.    சமீபத்தில் அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி  என்ற ஆவணப்படத்தை பாரிஸில் பார்த்து ரசித்தேன். அதனை,  அவரது அவுஸ்திரேலியா நண்பர்கள்  எழுத்தாளர்  கிருஷ்ணமூர்த்தி மற்றும்  ஒளிப்பதிவாளர் மூர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர். முருகபூபதி வீரகேசரி வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி எழுதிய காலத்தில்,  தினகரன் வாரமஞ்சரியில்  இலக்கிய விவகாரம் மற்றும்நாட்டு நடப்புகளை எஸ்தி என்னும் பெயரில்  மூத்த ஊடகவியலாளர்  எஸ். திருச்செல்வம் எழுதினார். யாழ்ப்பாணம்  ஈழநாடுவில் அதன் செய்தி ஆசிரியர் கே.ஜீ.மகாதேவா இப்படியும் நடக்கிறதுஎன்ற பத்தி எழுத்தைஎழுதினார்.   அதுபின்னர்  புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம் இலக்கியபீடம் என்ற வாராந்த பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். பின்னளில்  உதயன்-சஞ்சீவி யில் அதிரடி அரங்குஎன்ற பத்தியைமின்னல் என்ற பெயரில்  மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் எழுதினார்.தற்பொழுது  அவர் யாழ்ப்பாணம்  காலைக்கதிர் பத்திரிகையில் இனி இது இரகசியம் அல்ல என்னும் தலைப்பில் அதே மின்னலாக ஒளிர்கிறார். இத்தகைய பத்திகளை வாசிப்பதற்கென்றே ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. இன்றும் அந்த எண்ணிக்கை குறையவில்லை. இந்த எழுத்துகளை வாசிப்பதால் பல செய்திகளையும் சுவாரசியமான  தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

Continue Reading →

இலங்கையில் ‘மகுடம்’ பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’….

- வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' -1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய ‘டெல்டா ஏர் லைன்ஸ்’ நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளையே எனது நாவலான ‘அமெரிக்கா’. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் ‘குடிவரவாளன்’ என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது. ‘குடிவரவாளன்’ ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் ‘அமெரிக்கா’ தொடராக வெளிவந்த நாவல்.

நீண்ட நாள்களாக எனக்கு ‘அமெரிக்கா’ நாவலைத் தனி நூலாக வெளியிட வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக, விரைவில் இலங்கையில் ‘மகுடம்’ பதிப்பக வெளியீடாக இந்நாவல் வெளிவரவுள்ளது என்னும் மகிழ்ச்சியான தகவலைப்பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நண்பரும் , கட்டடக்கலைஞருமான சிவசாமி குணசிங்கம் (சிட்னி, ஆஸ்திரேலியா) அவர்கள் நாவலுக்கு சிறப்பான அட்டைப்படமொன்றினை வடிவமைத்துத் தந்துள்ளார். இவரே நான் ஆசிரியர் குழுத்தலைவராகவிருந்து வெளியிட்ட , மொறட்டுவைப்பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ (1980/1981)சஞ்சிகைக்கும் சிறப்பானதோர் அட்டைப்படத்தினை வடிவமைத்துத் தந்தவர் என்பதையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

Continue Reading →