‘ஞானம்’ சஞ்சிகை குறுநாவலான ‘சுமணதாஸ பாஸு’ம், அது பற்றிய கடிதங்கள் சிலவும்……

இம்மாத ‘ஞானம்’ சஞ்சிகையில் வெளியான எனது குறுநாவலான ‘சுமணதாஸ பாஸ்’ பற்றி எழுத்தாளர்கள் குரு அரவிந்தனும், முருகபூபதியும் கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். முதலில் இக்குறுநாவலைச் சிறப்பாகப் பிரசுரித்ததற்காக ”ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரனுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இக்குறுநாவல் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன், முருகபூபதி ஆகியோருக்கும் நன்றி.


1. குரு அரவிந்தனின் கடிதம்:


Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>

Aug. 1 at 10:03 p.m.


அன்பின் கிரிதரன், வணக்கம். ஞானம் இதழில் வெளிவந்த தங்களின் சுமணதாஸ் பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது.இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன. கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமான சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ வெளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம். குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


அன்புடன்

குரு அரவிந்தன்.

Continue Reading →